Showing posts with label pooja. Show all posts
Showing posts with label pooja. Show all posts

Friday, February 20, 2009

நான் கடவுள்




இந்த ப்டத்தை எப்படி விமர்சனம் செய்வதென்று தெரியவில்லை. நான் என்ன எதிர் பார்த்தேன் என்று தெரியவில்லை . சில துளிகள் மட்டும் இங்கே!

1) இரண்டு முன்று நிகழ்வுகளை வைத்து கொண்டு மீதி பதினைந்து காட்சிகளில் சிலரின் வாழ்கையை - அல்லது வாழ்க்கை இல்லாததை மட்டுமே வைத்து ஒரு இரண்டு மணி நேர படத்தை கொடுக்க முடியுமா?

2) எல்லாரும் இளையராஜாவின் இசையை நமிதா உயரத்திற்க்கு புகழ்கின்றனர். எனக்கு பாடல்களை தவிர பின்னனி நிறய காட்சிகளில் ஒரு இடராக உணர்ந்தேன். குறிப்பாக முன் பாதியில் சில காட்சிகளில் , அந்த உணர்விற்க்கு மாறாக இருப்பதாக பட்டது . ஆனால் அதே சமயம் அகோரியின் மனது ஒரு புரியாத புதிர் யென்பதை விளக்குவதற்க்காக இப்படி செய்ய்ய பட்டதாயென்று தெரியவில்லை .

3) பூஜா நன்றாக நடித்திருகின்றார், அவரின் அந்த வெள்ளை லென்ஸ் அப்பட்டமாக தெரிந்தாலும் ! கிளைமாக்ஸில் அவரின் உருக்கம் , படதொகுப்பாளரின் கை வண்ணத்தால் பட சுறுளில் கரைந்து போயிருக்கிறது.

4) கிளைமாக்ஸ் பலர் பல பல்லுடன் பல கருத்துகளை வீசி இருக்கின்றனர். அகோரி வாழ்வு இப்படி தான் இருக்குமோ ? சினிமாவில் ஹீரோ யார் என்பதை கொஞ்ச நேரம் சிந்திக்க செய்கின்றார் பாலா !

5) இந்த மொட்டை வில்லன் பக்கா - அதிலும் அந்த ஊமையை பிச்சை வைக்க அவர் செய்யும் ... பாலா - fantastic !!!

6) வடிவேல் கூடவே பல படத்தில் காமேடிக்கு ஒத்து ஊதி வந்தவர் இந்த படத்தில் பிண்ணி யெடுத்திருகின்றார்.

7) படத்தின் மைய்ய நாடி- நாங்கள் பிச்சை காரர்கள் , சமுதாயம் நக்கி துப்பிய கசடுகள் - இந்த குப்பையில் சந்தோஷங்கள் , அன்பு , பினைப்பு இருக்கும் - ஆனால் இப்படி கூட வாழ் விட மாட்டார்கள் போல இருக்கிறதே.இப்படி உள்ள ஒரு சுழ் நிலையில் சமுதாயத்தை எச்சிலாக மதிக்கும் ஒரு அகோரி வந்தால் !

8) இந்த படம் பிடித்திருகிறதா ? - ஒரு வாரம் முன்பு இல்லை , இப்பொழுது யொசிக்க நன்றாக இருக்கிறது !!!