நம் நாட்டின் மாடு சூடா மன்னர் இன்று காங்கிரஸ் மேல் ஒரு குண்டை வீசி இருக்கிறார். 1992 வில் நடந்த பாபர் மசுதி இடிப்பிற்கு காங்கிரஸ் உடந்தை - அதாவது , அப்போழுது பிரதம மந்திரியாக இருந்த நமது மொனலிசா நரஸிம்ம ராவ் பாபர் மசுதி இடிக்க படுமென்று தெரிந்தும் ஒன்றும் பண்ணவில்லை.இது ஏற்க கூடியதாக இல்லை . எல்.கே.அத்வானி அவர்களே இதை ஏதிர்பார்திருக்க மாட்டார்.பத்தியாயிரம் , உணர்வு ததும்பும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் , அங்கு என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது-குஜராத்தில் நடந்ததை போல . ஆனால் இப்படி அவர்களை உணர்ச்சி வச படி பேசியது பா.ஜா.காவின் சில தலைவர்களாக இருக்கலாம். சரி , இந்த விஷியத்திற்க்கு வருவோம். நமது லொள்ளு லாலு ஜி , பிரதம மந்திரியை பார்த்து அதிகம் பேச வேண்டாம் , அப்படி பேசினால் , இது போன்ற ரகசியங்களை சொல்ல வேண்டியிருக்கும் யென்று ஏச்சி அரித்து உள்ளார். ஐந்து ஆண்டு காலமாக இரயில்வே மந்திரியாக இருந்த போழுது, இது தெரிய வில்லை . அதுவும் நம்ம பச்ச புள்ள மன்மோஹன் SINh பார்த்து! ஆனால இதை பற்றி நாம கவலை பட வேண்டாம் . நோக்கியா ....மன்னிக்கவும்,சோனியா காந்தி மீது நம்பிக்கை இருக்கிறதென்று கூரி விட்டு , இரண்டு அமைச்சர் பதவி வாங்கி கொண்டு காங்கிரஸ் ஆட்சி வர நமது மாட்டுகார வேலன் உதவி செய்வார்.
***
இன்று IPL 2 வில் பஞ்சாப் அணியினரும் தில்லி அணியினரும் மோதி முடிந்த வரை நம்மை அவமான படுத்தினர்.20-20 யென்பதே ஒரு சுருக்க பட்ட புது முயற்ச்சி. அதிலும் மழை காரணமாக ஒரு அணி 12 ஒவர் பெட் செய்வதும் , மறுபடியும் மழை வந்து அடுத்த அணி வெறும் 7 ஒவர் விளையாடுவதும் லூசு தனமாக இருக்கிறது.முடிந்த வரை IPL பார்க்காதிர்கள். இப்பொழுது உள்ள பொருளாதார நிலைமயில் , எதாவ்து படிக்கவும். உங்களுடய மெள் அதிகாரிக்கு சோப் போடவும். அதுவும் இல்லயென்றால் காண்டம் வாங்கி கொண்டு வீடிற்க்கு போகவும் . எதாவ்து ஒன்று உருப்புடும்.
***
ஒரு வாரம் முன்பு அயன் பார்த்தேன். தமன்னாவின் உதடு , ஹாரிஸ் பாடல்கள், சுர்யாவின் திறமையான நடிப்பு , ஜகனின் ஹாஸியம் , வில்லனை தவிர எல்லாம் நன்றாக இருந்தது.குறிப்பாக அந்த ஆப்ப்ரிக்க சண்டை காட்சியின் வேகமும் , அழகான இருவர் நடுவே காதல் வளரும் விதமும், படம் பார்ப்பவர்களின் கவனத்தை தம் மிலிருந்து திரைக்கு கொண்டு வருகிறது.ஆனால் , அந்த வில்லன் ? இந்தியில் வசனத்தை பேசி , தமிழில் அதை டப் செய்து ,தமன்னாவிற்க்கு போட்டியாக முடி வளர்த்து , ஹாரிஸை விட்டு ஒரு செல்லோ பின்னனி இசையை கொடுத்தால் போதுமா? ஒரே ஒரு இடத்தில் , அவர் முதலில் கஞ்சாவை தொட்டு கொள்ளும் போழுது மட்டும் அவர் கதாபத்திரம் அழுத்தமாக பதிகிறது.மற்றபடி , மஹாபாரததில் அரக்கனின் கதாபாத்திராத்தில் எவ்வள்வு அழுத்தமோ, அதில் பாதி தான் இந்த வில்லனுக்கு.இந்த படத்தில் ம்ற்றொரு நல்ல விஷியம் , ஜெகனின் கதாபாத்திரம் தான் . முன் பகுதியில் , ஹாஸியதிற்க்கும், பின் பகுதியில் , சென்டிமென்டிற்க்கும் நன்றாக ஒத்து வருகிறார். சந்தானதிற்க்கு நல போட்டி.
1+1=2 போன்று நல்ல லாஜிக் உள்ளது , சண்டை காட்ச்சிகளிலும் கூட - சினிமாவின் விதிகளுக்கு உட்பட்டு! ஆக மோத்தம் முன்று மணி நேரம் நல்ல டைம் பாஸ்!!!!
Sunday, April 19, 2009
Thursday, March 26, 2009
Pasanga - coming of Age
நிலா காய்கிறது போன்று ஆரம்பித்து , உழவன் , தாஜ்மஹால் இசையை நினைவு படுத்தி பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் மிதக்கிறது 'அன்பாலே' பாடல் . பால முரளி அவர்களின் குரல் கொஞ்சம் லெசாக பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் அருமையான ரஹ்மான் மாதிரியான பாடல்- குறிப்பாக பாடலில் வரும் புல்லாங்குழல், இரண்டாம் சரணதிற்க்கு முன்பு வரும்BGM அருமையோஅருமை.
கொஞ்சம் michale jackson சாயல் வந்துவிடுவொமோ யென்ற பயத்தில் அரம்பிக்கும் 'ஒரு வெட்கம்' , சமீபத்தில் வந்த வாரணம் ஆயிரம் ரகம்.அருமை , பாடலில் தொடர்ச்சியாக வரும் அந்த bass lines , ரிதம் அருமை . shreya ghoshal பக்கா , அதுவும் சரணம் ஆரம்பத்தில் அவரது குரலும் bass lines உம் சொக்க வைக்கிறது .கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த பாடல் , கொஞ்சம் சுமாராக படம் பிடித்தாலும்.
தீம் முசிக் மாதிரி ஆரம்பித்து குழந்தைகளின் rock பாடல் மாதிரி இருக்கிறது. சரணத்தில் , கொஞ்சம் என்னுடய விருப்பமான கார்திக்ராஜாவை நினைவுபடுத்திகிறார். பாடல் வரிகளில் , வாண்டுகளின் அட்டாகசம் ததும்பிகிறது.
பென்னி தாயளின் பெயரை பார்த்த உடன் தெரிந்து விட்டது , இது ஒரு இன்னொரு சுப்பிரமணியபுர rock பாடல் மாதிரி தான் இருக்க போகிறதுஎன்று. நன்று. துள்ளலாக இருக்கிறது. ஆனால் அடுத்த படத்தில் உபயகோபடுத்த வேண்டாம்.
ஜேம்ஸ் வசந்தன்- இவர் கற்புறம் இல்லை , சுரியனாக வர வாழ்த்துகள். அதற்க்கு இரண்டம் படி வைத்து விட்டார்.
கொஞ்சம் michale jackson சாயல் வந்துவிடுவொமோ யென்ற பயத்தில் அரம்பிக்கும் 'ஒரு வெட்கம்' , சமீபத்தில் வந்த வாரணம் ஆயிரம் ரகம்.அருமை , பாடலில் தொடர்ச்சியாக வரும் அந்த bass lines , ரிதம் அருமை . shreya ghoshal பக்கா , அதுவும் சரணம் ஆரம்பத்தில் அவரது குரலும் bass lines உம் சொக்க வைக்கிறது .கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த பாடல் , கொஞ்சம் சுமாராக படம் பிடித்தாலும்.
தீம் முசிக் மாதிரி ஆரம்பித்து குழந்தைகளின் rock பாடல் மாதிரி இருக்கிறது. சரணத்தில் , கொஞ்சம் என்னுடய விருப்பமான கார்திக்ராஜாவை நினைவுபடுத்திகிறார். பாடல் வரிகளில் , வாண்டுகளின் அட்டாகசம் ததும்பிகிறது.
பென்னி தாயளின் பெயரை பார்த்த உடன் தெரிந்து விட்டது , இது ஒரு இன்னொரு சுப்பிரமணியபுர rock பாடல் மாதிரி தான் இருக்க போகிறதுஎன்று. நன்று. துள்ளலாக இருக்கிறது. ஆனால் அடுத்த படத்தில் உபயகோபடுத்த வேண்டாம்.
ஜேம்ஸ் வசந்தன்- இவர் கற்புறம் இல்லை , சுரியனாக வர வாழ்த்துகள். அதற்க்கு இரண்டம் படி வைத்து விட்டார்.
Labels:
James Vasanthan,
pasanga
Saturday, March 07, 2009
TN07 AL 4777 and AAmir
taxi நம்பர் படமும் ஆமீரும் நேற்று பார்த்தேன் . இரண்டு படமும் பார்த்தேன் . இரண்டுமே , ஒரு நாளில் நடக்கும் கதையை இரண்டு மணி நேரத்தில் சுருக்கி கூறப்பட்டுள்ளது . இறுதியில் , நமது ரசிகர்கள் மனம் நோகாதவாறு , ஆமீரில் கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் , முடிவில் பாஸிடிவாக முடித்திருக்கிறார்கள்.
ஆமீரில் , வெளி நாட்டிலிருந்து வீடு திரும்பும் ஒரு முஸ்லீம் டாக்டர் , ஒரு தீவிரவாதியின் செல்ஃபோனில் சிக்கி , விக்கி , தவித்து முடிவில் , தனது பெயருக்கேற்ப்ப ( ஆமீர் ஏன்றால் தலைவனென்று பொருள்) ஒரு காரியத்தை செய்கிறார். ஆமீர் , புத்துணர்ச்சி பெற்ற இந்தி சினிமாவின் ஒரு அடையாளம். பாடல்கள் இல்லை , காதல் இல்லை , ஸ்டார் இல்லை , அதிகமாய் சிருக்கும் வில்லனில்லை. இருந்தும் இரண்டு மணி நேரம் , அடுத்து என்ன நடக்க இருக்க போகின்ற ஆவலை நம்மிடம் தூண்டுகின்றது .
ஆனால் taxi நம்பர் படத்தை அப்படி சொல்ல முடியவில்லை . விறுவிறுப்பான கதை தான் . தேவையில்லாத இரண்டு பாடல்கள் கூட பரவாயில்லை -ஏதிரும் , புதிருமாக இருக்கும் இரண்டு நபர்களின் குணா தசியங்களை விலக்கும் விதத்தில் ஜோலித்திருக்க்கும் இயக்குனர் , இரண்டாம் பகுதியில் படத்த்குப்பில் விழந்த ஒட்டையை இடுப்போ , மார்போ வைத்து அடைக்க மறந்து விட்டார். டாக்ஸி டிரைவராக , கோபம் கொப்பளிக்கும் மனிதராக , உண்மையை மறைக்கும் கணவனாக , பழி வாங்கும் கதா பாதிரமாக - இப்படி பல குணா தசியங்களை , பட தொகுப்பின் சொதப்பல்களிலும் , கொஞ்சம் நகைச்சுவை கலந்து அருமையாக கொடுத்திருக்கிறார் பசுபதி . இவரின் கிழக்குக்கு மேற்க்காக நம்ம ' அஞ்சாதே' அஜ்மல் , இதில் பணக்காரணாக , தந்தையின் சொத்தை திரும்பி பெற வாதாடும் மகனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முன்னவரின் டாக்சியில் இயவர் ஏர போக , அது எப்படி இருவரின் வாழ்க்கையை பாதிக்கிறதென்பது தான் கதை.
ஆமீருக்கும் , taxi நம்பர் படத்திற்க்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை , jazz இசையை மையமாக வைத்து அமைந்துள்ள பின்னனி இசை . ஆமீரில் , இது கொஞ்சம் தூக்கம். ஹாலிவுடில் , இந்த மாதிரி படத்திற்க்கு jazz இசையை தான் பயன் படுத்துவர்.இங்கேயும் கச்சிதமாக பொருந்தியிருக்கிரது. கூறிப்ப்பாக , முதல் பதினைது நிமிடங்களில் theme செட் பண்ணும் இந்த பினனி தூள்.ஆமீரில் பாடல்கல் பின்னனியாக , படத்துடன் கலந்து வருகிறது . தீவிரவாதி அவரை ஒவ்வொரு இடமாக அலைய விட்டு, அப்படி அலயும் போது , கதாநாயகனின் முஸ்லீம் இன உனர்ச்சியை உஸ்ப்பேத்தி விடும் காட்சிகள் , ஒரு நல்ல சைக்கிளாகிகல் யுக்க்தி.அதே சமயம் , ஆமீரை பார்த்து , ஐஸ் குச்சியை நக்கிய படி , அந்த விபச்சாரி , தான் ஆங்கில காம யுக்திகளிலும் அனுபவமிக்கவளென்று சொல்லுவது மும்பை இயக்குனருக்கான லொள்ளு.
80ஸில் , பணக்கார பெண்ணும் , எழை ஆணும் படத்தின் பாதி வரை சண்டை போட்டு விட்டு , அப்புறம் ஜப்பானில் போயி டுயட் பாடுவர்கள். டாக்ஸியில் கிட்ட தட்ட அப்படி தான் . ஆனால் ஹீரோயின் கிடையாது . அதற்க்கு பதிலாக அஜ்மல் - ஏதிர்பாராத விதமாக பசுபதி வண்டியில் ஏறி விட்டு , அதில் தன் பாங்க் லாக்கரில் கீயை விட்டு விட , அந்த டாக்ஸி விபத்தில் மட்ட அதிலிருந்து எலி-புனை கதை ஆரம்பிக்கிறது.ஆமீரில் , எலி த்னது வீட்டிற்க்கு போகும்ம இல்லயா என்பதௌ தான் மைய்யம் . இந்த ஒரு வித்தியாசித்திலாலே , ஆமீருடன் நமக்கு கொஞ்சம் பினைப்பு அதிகமாக இருக்கிறது.டாக்ஸியில் , விறுவிறுப்பிற்க்கு தீனி கம்மி . இன்னும் கொஞ்சம் தீனி போட்டு , கதா பாத்திரங்களுடன் பினைப்பு ஏற்படுகிற மாதிரி பண்ணியிருந்தால் , டாக்ஸி நன்றாக் இருந்திருக்கும் , சிம்ரன் , பசுபதியின் நடிப்பை போல .
ஆமீரில் , வெளி நாட்டிலிருந்து வீடு திரும்பும் ஒரு முஸ்லீம் டாக்டர் , ஒரு தீவிரவாதியின் செல்ஃபோனில் சிக்கி , விக்கி , தவித்து முடிவில் , தனது பெயருக்கேற்ப்ப ( ஆமீர் ஏன்றால் தலைவனென்று பொருள்) ஒரு காரியத்தை செய்கிறார். ஆமீர் , புத்துணர்ச்சி பெற்ற இந்தி சினிமாவின் ஒரு அடையாளம். பாடல்கள் இல்லை , காதல் இல்லை , ஸ்டார் இல்லை , அதிகமாய் சிருக்கும் வில்லனில்லை. இருந்தும் இரண்டு மணி நேரம் , அடுத்து என்ன நடக்க இருக்க போகின்ற ஆவலை நம்மிடம் தூண்டுகின்றது .
ஆனால் taxi நம்பர் படத்தை அப்படி சொல்ல முடியவில்லை . விறுவிறுப்பான கதை தான் . தேவையில்லாத இரண்டு பாடல்கள் கூட பரவாயில்லை -ஏதிரும் , புதிருமாக இருக்கும் இரண்டு நபர்களின் குணா தசியங்களை விலக்கும் விதத்தில் ஜோலித்திருக்க்கும் இயக்குனர் , இரண்டாம் பகுதியில் படத்த்குப்பில் விழந்த ஒட்டையை இடுப்போ , மார்போ வைத்து அடைக்க மறந்து விட்டார். டாக்ஸி டிரைவராக , கோபம் கொப்பளிக்கும் மனிதராக , உண்மையை மறைக்கும் கணவனாக , பழி வாங்கும் கதா பாதிரமாக - இப்படி பல குணா தசியங்களை , பட தொகுப்பின் சொதப்பல்களிலும் , கொஞ்சம் நகைச்சுவை கலந்து அருமையாக கொடுத்திருக்கிறார் பசுபதி . இவரின் கிழக்குக்கு மேற்க்காக நம்ம ' அஞ்சாதே' அஜ்மல் , இதில் பணக்காரணாக , தந்தையின் சொத்தை திரும்பி பெற வாதாடும் மகனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முன்னவரின் டாக்சியில் இயவர் ஏர போக , அது எப்படி இருவரின் வாழ்க்கையை பாதிக்கிறதென்பது தான் கதை.
ஆமீருக்கும் , taxi நம்பர் படத்திற்க்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை , jazz இசையை மையமாக வைத்து அமைந்துள்ள பின்னனி இசை . ஆமீரில் , இது கொஞ்சம் தூக்கம். ஹாலிவுடில் , இந்த மாதிரி படத்திற்க்கு jazz இசையை தான் பயன் படுத்துவர்.இங்கேயும் கச்சிதமாக பொருந்தியிருக்கிரது. கூறிப்ப்பாக , முதல் பதினைது நிமிடங்களில் theme செட் பண்ணும் இந்த பினனி தூள்.ஆமீரில் பாடல்கல் பின்னனியாக , படத்துடன் கலந்து வருகிறது . தீவிரவாதி அவரை ஒவ்வொரு இடமாக அலைய விட்டு, அப்படி அலயும் போது , கதாநாயகனின் முஸ்லீம் இன உனர்ச்சியை உஸ்ப்பேத்தி விடும் காட்சிகள் , ஒரு நல்ல சைக்கிளாகிகல் யுக்க்தி.அதே சமயம் , ஆமீரை பார்த்து , ஐஸ் குச்சியை நக்கிய படி , அந்த விபச்சாரி , தான் ஆங்கில காம யுக்திகளிலும் அனுபவமிக்கவளென்று சொல்லுவது மும்பை இயக்குனருக்கான லொள்ளு.
80ஸில் , பணக்கார பெண்ணும் , எழை ஆணும் படத்தின் பாதி வரை சண்டை போட்டு விட்டு , அப்புறம் ஜப்பானில் போயி டுயட் பாடுவர்கள். டாக்ஸியில் கிட்ட தட்ட அப்படி தான் . ஆனால் ஹீரோயின் கிடையாது . அதற்க்கு பதிலாக அஜ்மல் - ஏதிர்பாராத விதமாக பசுபதி வண்டியில் ஏறி விட்டு , அதில் தன் பாங்க் லாக்கரில் கீயை விட்டு விட , அந்த டாக்ஸி விபத்தில் மட்ட அதிலிருந்து எலி-புனை கதை ஆரம்பிக்கிறது.ஆமீரில் , எலி த்னது வீட்டிற்க்கு போகும்ம இல்லயா என்பதௌ தான் மைய்யம் . இந்த ஒரு வித்தியாசித்திலாலே , ஆமீருடன் நமக்கு கொஞ்சம் பினைப்பு அதிகமாக இருக்கிறது.டாக்ஸியில் , விறுவிறுப்பிற்க்கு தீனி கம்மி . இன்னும் கொஞ்சம் தீனி போட்டு , கதா பாத்திரங்களுடன் பினைப்பு ஏற்படுகிற மாதிரி பண்ணியிருந்தால் , டாக்ஸி நன்றாக் இருந்திருக்கும் , சிம்ரன் , பசுபதியின் நடிப்பை போல .
Labels:
aamir,
pasupathi,
TN07 AL 4777
Saturday, February 28, 2009
அரசியல் தமாஷ் - 2
தன்னுடய மைத்துனனிற்க்காக லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மிரட்டியதால் அமைச்சர் பூங்கோதை தனது பதவியை இழந்தார், எட்டு மாதத்திற்க்கு முன்பு . அவர் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் பேசியவை வெளியாகி பெரும் சர்ச்சை ஆகி ,முதல்வர் அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார் . பாராடதக்கது , இரண்டு நாள் முன்பு வரை.
நேற்று நமது கவர்னர் அதே பூங்கோதைக்கு தகவல் தொழில்நுட்பம் அமைச்சரவையை தாரை வார்திருக்கிறார். அந்த விழாவில் கலைஞரின் இரண்டாவது குடும்பம்த்தினர் அனைவரும் கலந்து ஆசிர்வத்திதுள்ளனர். ஒய்வு பெற்று , பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டிருந்த ஷண்முகம் தலைமையில் நியாயமான ஒரு விசாரணை கமிஷன் வைத்து பூங்கோதை குற்றமற்றவரென்று சான்றிதள் தந்துள்ளார் . அப்படியானல் , அந்த தொலைபேசியில் இடம் பெற்ற அந்த பெண்மணி , அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி யார் ? சும்மா விளையாட்டென்றால் , அப்படி விளையாடியனவர்க்ள் யார் ?
***
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன் பாட்டை பற்றி பேச குலாம் நபி ஆசாத் சென்னை வந்துள்ளார். அலுவலக பணி இடர் பட்டாலும் , குலாம் நபியின் சிறுபான்மை மனம் நோவக்கூடாதென்பதில் கலைஞர் கவனமாக இருப்பார். தொகுதி உடன்பாட்டில் ராமதாஸும் பங்கேற்ப்பாறா? இல்லை கடைசி நிமிடம் வரை மதில் மேல் பூனையாக இருந்து யார் ஜெய்க்க போகும் கட்சி யாரென்பதை கண்டுபிடித்து அந்த கூட்டணியில் சேர்வாரா? இருக்கவே இருகு நம்ம இலங்கை பிரச்சனை .. என்ன முடிவெடுத்தாலும் அதை காரணம் காட்டி விடலாம்.
****
தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பாகுபாடில்லாமல் செய்தி பிரசுரிக்கின்ரனர். இதை பற்றி பெருமைப்பட ஒன்றும் இல்லை . கலைஞரும் மாறன் சகோதரர்களும் இடையில் கொஞ்சம் ஃபெவிகால் போட்டபட்டுள்ளது. இருந்தாலும் அழகிரியின் கை ஓங்கி இருக்கும் வரையில் கொஞ்சம் கவனமாக தான் இருப்பார்கள் மாறன் brothers
***
தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி, தனது சகா நவீன் சாவ்லா காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுகிறாரென்று அவரை பணி நீக்கம் செய்ய்ய வேண்டுமென்று அவரின் பரிந்துரை , எதிர்பார்த்தபடி நடுவண் அரசால் நிராகரிக்க பட்டது . ரு வேளை கோபால்சாமி கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாக இருந்திருக்கலாம். நமது சேஷன் மாதிரி மன நிலை உடயவராக இருக்கலாம். இது வரைக்கும் சரி - ஆனால் அவர் அனுப்பிய ஆதாரங்கள் உண்மையா? அப்படி பொயென்றால் , ஏன் பொய்? உண்மையென்றால் , அதற்கு நடுவண் அரசு எனன் நட வடிக்கை எடுக்க போகிறது ?
நாமம் போட்ட ஒரு காரணத்தினால் , கோபால்சாமியை பி.ஜே.பீ யின் ஆதர்வாளரென்று கூற்வது சுத்த மடத்தனம் . அவரது அறிக்கையில் ஆதாரஙளை தெள்ள தெளிவாக கூறியிருப்பதாக www.rediff.com சொல்லுகிறது. அது செரி , எமர்ஜேன்ஸி போது காங்கிரஸ் ஆட்சிக்கு ஜால்ரா அடித்தவர் தான் இந்த நமது நவீன் சாவ்லா?
Labels:
CEC,
karunandhi,
Maaran,
naveen chawla,
TN Politics
Wednesday, February 25, 2009
கலைமாமாணி நயந்தாரா !!!!!!!!
சுமார் எழுபது கலைஞர்களுக்கு ( நம்ம cm a சொல்லல) இந்த வருடம் கலைமாமணி விருதுகளை விநியோகம் பண்ணியிருக்கிறார்கள்.அதில் ஆண்களுக்கு செலவு வைத்த அஸின்னும் , நயந்தாராவும் அடக்கம். கலைமாமணி விருது எப்படி வந்தது , அதை பெரியார் எப்படி எதிர்த்தார் , அதை யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், என் இந்த இரண்டு ஹீரொயிங்களுக்கு கொடுக்க கூடாது போன்ற உபயகோமற்ற செய்திகளையும் , கருத்து நுரைகளையும் நீங்கள் ஞானியிடம் எதிர்பாருங்கள்.
நான் அப்படியே உல்டா ...என்ன தவறு . பெண்களாய் பிறந்து , அழகான அம்சங்களை வளர்த்து பேணி காபற்றியது குற்றமா? நயந்தாரா நமக்கு என்ன்வெல்லாம் செய்திருக்கிறார்!!
ஒரு மிலிட்டரி மாமாவிற்க்கு மகளாக பிறந்து , இந்தியா முழுவதும் சுற்றி திறிந்து , தமிழுக்கு சந்திரமுகி மூலம் அறிமுகமாகி , இன்று வில்லுவில் விஜயின் ஆட்டத்தை விட அவர் ஒரு பத்து அடி தூரம் ஓடி வந்தால் விஸில் தூள் பளக்கிறது!எத்தன அஜித்ரசிகர்கள் பில்லாவில் அவரின் சண்டை காட்ச்சிகள் போது உறங்கி விட்டு , கிளோ-ஸப் காட்ச்சிகளில் வீரென்று துள்ளி எழுந்தனர் ! பில்லாவில் கூட அவர் திறமை தெரியவில்லையா ? வில்லுவில் எத்தனை காட்சிகளில் குனிந்து நிமிர்ந்து , ' தலை நிமிர்ந்து நில்லடா' யென்னும் பாரதியின் கற் சொற்க்களை பிரகடன படுத்தியிருப்பார்!!
இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் . நயந்தாரவை..மன்னிக்கவும் ..வல்லவனை எடுத்து கொள்ளுங்கள் . சிம்புவின் மீது பல பொறாமை தொயிந்த அனல் முச்சினை அவர் முளைக்க்குள் புக செய்து அவர் நயந்தாராவுடன் கச முசா பண்ணிய திரை காவியங்களை வெளியட செய்து விட்டனரே, நமது ரசிகர்கள் ! அதை பார்த்து எத்தனை நாள் எனது நண்பன் ( ஆஸ் க்கு... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஸார்) தலைகாணியை கடித்திறுப்பார்? அவருக்கும் என்ன பல உருப்புகள் உருப்படியாக இல்லயா ?
குசேலனில் ரீ-ரெகார்டிங்கில் அவரை பார்த்த போழுது , உணர்ச்சி போங்கி கீ போர்டை அமுக்கி, அதுவே அருமையான பின்னனி இசையாக நமது தம்பி ஜீ.வீ.பிராகஷ் கொடுக்க வில்லையா? வல்லவனில் சிம்பு அடித்த கிஸ்ஸை பார்த்து ,' சினிமாவிலே இப்படி பண்ண்ரானே , நிஜமா என்ன பண்ணியிருப்பானென்று ஒரு கள்ளி காட்டு இதிகாஸத்தை நமது நண்பர்கள் படைக்க வில்லையா?' . இது கூட பரவாயில்லை ..வடிவேல் , குசேலனில் அந்த கிலோ-ஸப்பில் நயனதாராவின் ..ச் ச் .. முடிய வில்லை .
கலைக்கு இப்படி செவையும் உப்புமாவும் செய்த நமது நயந்தாரவிற்க்கு என்ன கொடுத்தாலும் தகும் !! இப்பொழுது இந்த இரண்டு காவியங்களை பார்த்து மகிழுங்கள்.
நான் அப்படியே உல்டா ...என்ன தவறு . பெண்களாய் பிறந்து , அழகான அம்சங்களை வளர்த்து பேணி காபற்றியது குற்றமா? நயந்தாரா நமக்கு என்ன்வெல்லாம் செய்திருக்கிறார்!!
ஒரு மிலிட்டரி மாமாவிற்க்கு மகளாக பிறந்து , இந்தியா முழுவதும் சுற்றி திறிந்து , தமிழுக்கு சந்திரமுகி மூலம் அறிமுகமாகி , இன்று வில்லுவில் விஜயின் ஆட்டத்தை விட அவர் ஒரு பத்து அடி தூரம் ஓடி வந்தால் விஸில் தூள் பளக்கிறது!எத்தன அஜித்ரசிகர்கள் பில்லாவில் அவரின் சண்டை காட்ச்சிகள் போது உறங்கி விட்டு , கிளோ-ஸப் காட்ச்சிகளில் வீரென்று துள்ளி எழுந்தனர் ! பில்லாவில் கூட அவர் திறமை தெரியவில்லையா ? வில்லுவில் எத்தனை காட்சிகளில் குனிந்து நிமிர்ந்து , ' தலை நிமிர்ந்து நில்லடா' யென்னும் பாரதியின் கற் சொற்க்களை பிரகடன படுத்தியிருப்பார்!!
இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் . நயந்தாரவை..மன்னிக்கவும் ..வல்லவனை எடுத்து கொள்ளுங்கள் . சிம்புவின் மீது பல பொறாமை தொயிந்த அனல் முச்சினை அவர் முளைக்க்குள் புக செய்து அவர் நயந்தாராவுடன் கச முசா பண்ணிய திரை காவியங்களை வெளியட செய்து விட்டனரே, நமது ரசிகர்கள் ! அதை பார்த்து எத்தனை நாள் எனது நண்பன் ( ஆஸ் க்கு... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஸார்) தலைகாணியை கடித்திறுப்பார்? அவருக்கும் என்ன பல உருப்புகள் உருப்படியாக இல்லயா ?
குசேலனில் ரீ-ரெகார்டிங்கில் அவரை பார்த்த போழுது , உணர்ச்சி போங்கி கீ போர்டை அமுக்கி, அதுவே அருமையான பின்னனி இசையாக நமது தம்பி ஜீ.வீ.பிராகஷ் கொடுக்க வில்லையா? வல்லவனில் சிம்பு அடித்த கிஸ்ஸை பார்த்து ,' சினிமாவிலே இப்படி பண்ண்ரானே , நிஜமா என்ன பண்ணியிருப்பானென்று ஒரு கள்ளி காட்டு இதிகாஸத்தை நமது நண்பர்கள் படைக்க வில்லையா?' . இது கூட பரவாயில்லை ..வடிவேல் , குசேலனில் அந்த கிலோ-ஸப்பில் நயனதாராவின் ..ச் ச் .. முடிய வில்லை .
கலைக்கு இப்படி செவையும் உப்புமாவும் செய்த நமது நயந்தாரவிற்க்கு என்ன கொடுத்தாலும் தகும் !! இப்பொழுது இந்த இரண்டு காவியங்களை பார்த்து மகிழுங்கள்.
Labels:
billa,
kalaimaamani,
kummu,
nayanthara,
naynthaara
Sunday, February 22, 2009
தமிழ அரசியல் - தமாஷ் -1
காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாரென்று நமது தாயார் கூறியுள்ளார். படிக்காதவனில் உள்ள மசாலாவை விட இந்த அறிவிப்பில் அதிகம்.ஏன் ?
1) ஒரு வேளை கூட்டணிக்கு காங்கிரஸ் தயாரென்றால் , தி.மு.காவின் கதி என்ன ? பாட்டாளி மக்கள் கட்சியின் மீது குதிரை சவாரி செய்ய்ய வேண்டிய தான் . மாநில ஆட்சியும் காங்கிரஸை நம்பி இருப்பதால் , கலைஞர் தனது திரை கதை எழுதும் திறமையை கொஞ்சம் கூர் படுத்தி கொள்ள வேண்டும் . ஒன்றும் இல்லையென்றால் , அதை வைத்து கொண்டு ஒட்டலாம்.
2) கனிமொழி என்ன பண்ணுவார்? சென்னை சங்கமம் என்ன ஆகும் ? ஜெகத் காஸ்பெரின் LTTE உதவிக்கு யார் உதவி செய்வார்? கனிமொழி பேசாமல் பெண் விடுதலை பற்றி பத்து புத்தகங்கள் எழுதி , அதை வீரமனி வைத்து வெளியிட்டு, அந்த வெளியிட்டு விழாவில் 'தமிழ் பெண்கள் மட்டும் கற்ப்புகரிசிகள், ரீக் வேதத்தில் மற்ற பெண்களை தொட்டு விட்டு தான் ஒரு இந்து சாப்பிட வேண்டுமென்று சொல்ல்யிருக்கிறது ' போன்ற கருத்துக்களை கூறி மீடியாவில் ஒரு வாரம் ஒட்டலாம்.
3) ஸ்டாலின் ? ஒரு வேளை பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஆ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று , தி.மு.கா மாநிலத்தில் ஆட்சி இழக்க ஏற்பட்டால் - தனது தொகுதியை மட்டும் நென்றாக கவனித்து கொள்ளலாம்.டி.ஆர்.பாலு , ஆற்காட்டார் போன்றோரை ஒதுக்கி வைக்க முயற்ச்சி எடுக்க வேண்டும். எப்படியும் ஜெயலலிதா எதாவது ஊழலோ , கடுமையான நடவடிக்கை எடுத்தோ மக்கள் செல்வாக்கை இழந்து விடுவார்- அப்பொழுது மீண்டும் தி.மு.கா காட்சிக்கு வரும் - ஸ்டாலின் Cm ஆகலாம்.
4) நமது சிகப்பு சகோதரர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. காங்கிரஸ் பழம் புளிக்குமென்று ஆ.தி.மு.க பக்கம் சாய்ந்தால், ஆ.தி.மு.கா அந்த பழைய புளித்த பழத்தையே நக்கி இருக்கிறது. இதுவும் தேவை , இன்னுமும் தேவை !
5) சேது சமுத்திரம் , ஸ்பெக்ற்றம், தன் மகனின் கம்பேனிக்கு சலுகை கட்டிய ஊழல்- இப்படி பல செய்த நமது எச்சிலுகுரிய அமைச்சர்கள் , முடிந்த வரையில் சுருட்டி கொள்ள வேண்டும். ஜெய லலிதா வந்தால் , ஜெட்டி முதற்கொண்டு உருவி விடுவார்.
6) இதில் பெரிசாக பயன் பேறுபவர் நமது மாறன் சகோதரர்கள் தான் . காலாநதி மாறனை வைத்து தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பார பட்சம் இல்லாமல் செய்திகள் வெளியிட வேண்டியது. காலநதி மாறனை வைத்து தாத்தா, ஸ்டாலினுடன் கொஞ்சம் ஃபெய்விகால் ஒட்டு ஒட்ட வேண்டியது. ஜெய்ச்சால் , காலநதி மாறன் , தோற்றார் தயானதி மாறனின் காப்பாற்றுவார்.
Friday, February 20, 2009
நான் கடவுள்

இந்த ப்டத்தை எப்படி விமர்சனம் செய்வதென்று தெரியவில்லை. நான் என்ன எதிர் பார்த்தேன் என்று தெரியவில்லை . சில துளிகள் மட்டும் இங்கே!
1) இரண்டு முன்று நிகழ்வுகளை வைத்து கொண்டு மீதி பதினைந்து காட்சிகளில் சிலரின் வாழ்கையை - அல்லது வாழ்க்கை இல்லாததை மட்டுமே வைத்து ஒரு இரண்டு மணி நேர படத்தை கொடுக்க முடியுமா?
2) எல்லாரும் இளையராஜாவின் இசையை நமிதா உயரத்திற்க்கு புகழ்கின்றனர். எனக்கு பாடல்களை தவிர பின்னனி நிறய காட்சிகளில் ஒரு இடராக உணர்ந்தேன். குறிப்பாக முன் பாதியில் சில காட்சிகளில் , அந்த உணர்விற்க்கு மாறாக இருப்பதாக பட்டது . ஆனால் அதே சமயம் அகோரியின் மனது ஒரு புரியாத புதிர் யென்பதை விளக்குவதற்க்காக இப்படி செய்ய்ய பட்டதாயென்று தெரியவில்லை .
3) பூஜா நன்றாக நடித்திருகின்றார், அவரின் அந்த வெள்ளை லென்ஸ் அப்பட்டமாக தெரிந்தாலும் ! கிளைமாக்ஸில் அவரின் உருக்கம் , படதொகுப்பாளரின் கை வண்ணத்தால் பட சுறுளில் கரைந்து போயிருக்கிறது.
4) கிளைமாக்ஸ் பலர் பல பல்லுடன் பல கருத்துகளை வீசி இருக்கின்றனர். அகோரி வாழ்வு இப்படி தான் இருக்குமோ ? சினிமாவில் ஹீரோ யார் என்பதை கொஞ்ச நேரம் சிந்திக்க செய்கின்றார் பாலா !
5) இந்த மொட்டை வில்லன் பக்கா - அதிலும் அந்த ஊமையை பிச்சை வைக்க அவர் செய்யும் ... பாலா - fantastic !!!
6) வடிவேல் கூடவே பல படத்தில் காமேடிக்கு ஒத்து ஊதி வந்தவர் இந்த படத்தில் பிண்ணி யெடுத்திருகின்றார்.
7) படத்தின் மைய்ய நாடி- நாங்கள் பிச்சை காரர்கள் , சமுதாயம் நக்கி துப்பிய கசடுகள் - இந்த குப்பையில் சந்தோஷங்கள் , அன்பு , பினைப்பு இருக்கும் - ஆனால் இப்படி கூட வாழ் விட மாட்டார்கள் போல இருக்கிறதே.இப்படி உள்ள ஒரு சுழ் நிலையில் சமுதாயத்தை எச்சிலாக மதிக்கும் ஒரு அகோரி வந்தால் !
8) இந்த படம் பிடித்திருகிறதா ? - ஒரு வாரம் முன்பு இல்லை , இப்பொழுது யொசிக்க நன்றாக இருக்கிறது !!!
Labels:
arya,
bala,
illayaraaja,
naan kadavul,
pooja
Saturday, February 07, 2009
எங்களுக்கும் ஒரு இடம் !

நேற்று , பிராமணர் சங்கத்தில், பிராமண்ர்களுக்கு எழு சதவிதம் இடம் கிடைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருகின்றனர். இதில் எஸ். வீ. சேகர் போன்றோர் கலந்து கொண்டிருகின்றனர். இதை reverse discrimintaionல் பார்க்க வேண்டும்.உண்மையில் ,பிராமண்ர்களுக்கு என்ன மாதிரி தொல்லைகள் இருகின்றன யென்பதை பார்ப்போம்.
1) எல்லா படங்களிலும் குறைந்தது பிராமணர்கள் பழமைவாதிகள்,ஜாதி வெறியர்கள்-விவேக் உட்பட பல நபர்கள் சித்தரித்து உள்ளனர். இதில் ஒரளவு உண்மை இருந்தாலும் , தலித்தின் வாயில் மலத்தை அடைக்கும் அளவுக்கு ஜாதி வெறி இல்லை. கமலஹாஸன் தேவர் மகனெறு ஒரு படத்தில் தேவர்களை போற்றி ஒரு பாடல் வைத்ததால் , தலித் அன்பர்களை அந்த பாடல் பாடி அடக்கியாண்டர்களென்று ஒரு அரஸ்யில்வாதி கூறினார்( எவ்வள்வு உண்மைஎன்று தெரியவில்லை ) .
2) எல்லோரும் விவாதித்து நைந்து போன இட ஒதிக்கிடு . இதை பற்றி விரிவாக கூற தேவயில்லை.
3)சில அரசியில்வாதிகள், குறிப்பாக, நமது கலைஞர் அவர்கள் , தான் பிராமணர் இல்லாத காரணத்தில் தான் முன்னேற முடியவில்லையென்று ஆயிரம் கோடி சொத்து செர்ந்த்து பின்னரும் கூரி கொண்டிருகின்ரணர்.
4) ஜாதி பெயர் ஒரு prefixஆக கெட்ட வாத்தைகளுக்கு முன்பாக உபயகோபடுத்தபடுவது அநேகமாக 'ஐயர்' ஜாதிக்கு தான்.உதாரணமாக 'ஐய புண்**'.
5) எந்த விவாதமெத்தாலும் , அதில் ஒரு பிராமணர் பங்கேற்றால், அவருடய வாதத்திற்க்கு சரியான காரணங்களின் கோர்வையாக எதிர் வாதம் கிடைக்காவிட்டால், உடனடியாக மனு சாஸ்திரத்தை எடுத்து விடுவார்கள். மனு சாஸ்திரத்தை பூரணமாக படிக்காமல். மனௌ சாஸ்திரத்தின் படி பிராமணன், பிழைப்பதற்க்கு வேதங்களைஒதி தான் பிழைக்க வேண்டும். பணம் சேர்த்து வைக்க கூடாது. இந்த மாதிரி விடஷயங்களை அவர்கள் சுட்டி காட்ட மாட்ட்டர்கள்.
இப்படி பல ..ஆனால் , இந்த காரணங்களுக்காக இட ஒதிக்கிடு கேட்பதா ? எஸ்.வீ. சேகர் நன்றாக காமமேடி பண்ணுகிறார், உண்மையிலே! மேல சொன்ன ஐந்து விஷயங்களால் , பிராமணர்களை யாரும் ஒதுக்க வில்லை . ஆனால் கொஞ்சம் கொஞ்சம் மரியாதை குறைவாக நடத்துகின்ரனர். அவ்வள்வு தான் . அதிலும் பெரிய காமேடி , பிராமணர்கள் சிறு பான்மையோரென்று காரணம் காடி இட ஒதிக்கிடு வேண்டுமாம். இப்படியே போனால் , எதோ ஒரு groupism விதிகளில் , ஒரு குழு சிறுபான்மை குழுக்களில் சேர்ந்து விடும்.
போங்கடா போங்க
இலங்கை தமிழர்களை கொடுமை படுத்தும் சிங்கள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று மற்றொரு இந்திய தமிழர் இன்று தீ குளித்துள்ளார். இதை பலர் பல விதமாக பார்க்கின்றனர். எனக்கு அவருடய குடும்பத்தை நினைத்தால் தான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. அவர்து தாய் , தந்தை , தம்பி , மனைவி , குழந்தைக்களுக்கு அவரின் கடமை என்ன ஆயிற்று ?ஒரு அரசியில் தலைவர் தீ குளிப்பது இல்லையே !
உயிரை என் எப்படி துச்சமாக மதிக்கின்றனர்? இல்லை தீ குளித்தால் தான் ஏதாவது ஆக போகிறதா ? அதற்க்கு பதிலாக , கள்ள தோணி பிடித்து இலங்கைக்கு போய் ஏதாவது செய்யலாமே! இல்லை ஒரு ஆயிரம் பேரை சேர்த்து ஒரு பெரிய போரடத்தை நடந்த்த்லாமே-அப்பொழுது ஒன்றும் பெரிதாக நடந்து விடாது , ஆனால் உங்கள் உயிர் இப்படி போகாது . எல்லாற்றுக்கும் மேலாக தமிழை உயிர் போல மதித்து , இந்திய தமிழர்களை சர்க்கஸ் கோமாளிகளை போன்று நடத்தும் நமது அரசியில் வாதிகள் இதை பற்றி ஒரு வரி கூட துப்ப மாட்டார்கள்.வோட்டு கேட்ட்கும் போழுது மட்டும் ஒட்டுவார்கள்.
இது இப்படி யென்றால் , சிங்கங்கள், புலிகள் , சிறுத்தைகளென்று கட்சிகள் நடத்தி வரும் 'உலக' தமிழர்கள் , நமது நாட்டின் சொத்துகளை அழித்தால் , இலங்கை தமிழர்களை வாழ வைக்குமென்று நம்புகின்றனர். இதற்கு பதிலாக அவர்கள் வீட்டு பொருட்களை தெருவில் போடு உடைக்கலாம். முடிந்தால் இந்த போராட்டத்தில் நாங்களும் உற்சாகமாக கலந்து கொள்வோம்.முதலில் அந்த கட்சியின் தலைவரின் வீட்டு பொருட்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.முதலில் சாகும் வரை அவரின் நான்கு நாள் போராட்டம் முடியட்டும்.
அப்புறம் நமது சி.எம் அடித்த பல்டி பற்றி பல அன்பர்கள் தங்கள் இணைய தளத்தில் கல்வெட்டு எழுதி வைப்பது போல எழுதி உள்ளனர். குறிப்பாக அவர் பிராபகரனை ஒரு சர்வாதிகாரி யென்றும் , சகோதர யுத்ததின் ஆரம்ப வேராக இருக்கிறாரென்று அவர் சொல்லியிருப்பது இது தான் முதல் தடவையென்று நினைக்கிறேன் . இது அவர் பார்த்த உண்மையா , இல்லை மத்தியில் மந்திரிகளை நிலைக்க வைக்கும் உத்தியா, பல்டியா, வயதானவர்களின் குழப்ப பேச்சா, தெளிவா , தனது ஆட்சி காங்கிரஸின் கையிலும் இருக்கின்ற உண்மையா-தெரியவில்லை. ஆனால் சில பல வருஷமாக கடிதம், எதுகை-மோனை,முரசொலி,தங்களின் குடும்ப சானல்கள், இப்படி பல வற்றின் மூலம் LTTE க்கு ஆதரவு தெரிவித்தவர் , இப்படி சொல்லியிருப்பது , well its surprising !
எல்லாவற்றிக்கும் மேலாக,சோ, ஜெயலலிதா, கலைஞர், சிறுத்தைகள்,தமிழ், இதயம் இனித்தது-> இதையெல்லாம் விட்டு விடுங்கள்.அப்பாவி மக்கள் நமக்கு அண்டை நாட்டில் , வருட கணக்கில் யாரோ பண்ணிய தப்புகளின் குவியல்களின் காரணமாக இன்று கொடுமைகளை அனுபவிக்கின்ர். நாம் வாழும் வெறுமை மனதில் கொஞ்சம் ஈரமும் பிறக்கட்டும். அதற்க்கு பிறகு உங்கள் வாழ்கயை பார்த்து கொள்ளுங்கள்.
உயிரை என் எப்படி துச்சமாக மதிக்கின்றனர்? இல்லை தீ குளித்தால் தான் ஏதாவது ஆக போகிறதா ? அதற்க்கு பதிலாக , கள்ள தோணி பிடித்து இலங்கைக்கு போய் ஏதாவது செய்யலாமே! இல்லை ஒரு ஆயிரம் பேரை சேர்த்து ஒரு பெரிய போரடத்தை நடந்த்த்லாமே-அப்பொழுது ஒன்றும் பெரிதாக நடந்து விடாது , ஆனால் உங்கள் உயிர் இப்படி போகாது . எல்லாற்றுக்கும் மேலாக தமிழை உயிர் போல மதித்து , இந்திய தமிழர்களை சர்க்கஸ் கோமாளிகளை போன்று நடத்தும் நமது அரசியில் வாதிகள் இதை பற்றி ஒரு வரி கூட துப்ப மாட்டார்கள்.வோட்டு கேட்ட்கும் போழுது மட்டும் ஒட்டுவார்கள்.
இது இப்படி யென்றால் , சிங்கங்கள், புலிகள் , சிறுத்தைகளென்று கட்சிகள் நடத்தி வரும் 'உலக' தமிழர்கள் , நமது நாட்டின் சொத்துகளை அழித்தால் , இலங்கை தமிழர்களை வாழ வைக்குமென்று நம்புகின்றனர். இதற்கு பதிலாக அவர்கள் வீட்டு பொருட்களை தெருவில் போடு உடைக்கலாம். முடிந்தால் இந்த போராட்டத்தில் நாங்களும் உற்சாகமாக கலந்து கொள்வோம்.முதலில் அந்த கட்சியின் தலைவரின் வீட்டு பொருட்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.முதலில் சாகும் வரை அவரின் நான்கு நாள் போராட்டம் முடியட்டும்.
அப்புறம் நமது சி.எம் அடித்த பல்டி பற்றி பல அன்பர்கள் தங்கள் இணைய தளத்தில் கல்வெட்டு எழுதி வைப்பது போல எழுதி உள்ளனர். குறிப்பாக அவர் பிராபகரனை ஒரு சர்வாதிகாரி யென்றும் , சகோதர யுத்ததின் ஆரம்ப வேராக இருக்கிறாரென்று அவர் சொல்லியிருப்பது இது தான் முதல் தடவையென்று நினைக்கிறேன் . இது அவர் பார்த்த உண்மையா , இல்லை மத்தியில் மந்திரிகளை நிலைக்க வைக்கும் உத்தியா, பல்டியா, வயதானவர்களின் குழப்ப பேச்சா, தெளிவா , தனது ஆட்சி காங்கிரஸின் கையிலும் இருக்கின்ற உண்மையா-தெரியவில்லை. ஆனால் சில பல வருஷமாக கடிதம், எதுகை-மோனை,முரசொலி,தங்களின் குடும்ப சானல்கள், இப்படி பல வற்றின் மூலம் LTTE க்கு ஆதரவு தெரிவித்தவர் , இப்படி சொல்லியிருப்பது , well its surprising !
எல்லாவற்றிக்கும் மேலாக,சோ, ஜெயலலிதா, கலைஞர், சிறுத்தைகள்,தமிழ், இதயம் இனித்தது-> இதையெல்லாம் விட்டு விடுங்கள்.அப்பாவி மக்கள் நமக்கு அண்டை நாட்டில் , வருட கணக்கில் யாரோ பண்ணிய தப்புகளின் குவியல்களின் காரணமாக இன்று கொடுமைகளை அனுபவிக்கின்ர். நாம் வாழும் வெறுமை மனதில் கொஞ்சம் ஈரமும் பிறக்கட்டும். அதற்க்கு பிறகு உங்கள் வாழ்கயை பார்த்து கொள்ளுங்கள்.
Wednesday, January 14, 2009
அபியும் நானும் - வா வா என் தேவதையே!!

'அபியும் நானும்' பாடல்களை முதல் முறை கேட்ட பொழுது எனக்கு அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லையென்று தான் தோன்றியது. அதிலும் அந்த கைலாஷ் கெரின் உச்சரிப்பு - பாவர்க்காய் சாரை போல கசந்தது. சாதனா சர்கம் பாடல் மட்டும் பாஸ் மார்க் வாங்கி தலையை தூக்கியது. வித்யாசாகரை இளையராஜாவின் வாரிசு என்றேழுதிய கையை ஒரு முறை கடிக்கலாம் போன்று இருந்த்து - இந்த பாடலை கேட்கும் வரை .
அப்பா - மகள் உறவு பற்றி அதிகமாக யாரும் திரையில் சொல்லியது இல்லை . அப்படியே சொன்னாலும் , ஒடி போன மகளை நினைத்து உருகி , மருகி அழும் அப்பாவை தான் காண்ப்பிபார்கள். இந்தியில் இதை விட மோசம். அந்த உறவை இசையை விட இசையில் மிதக்கும் அருமையான வரிகளில் இன்னும் அழுத்தமாக சொல்ல முடியும்.வைரமுத்துவும் வித்யசாகரும் அதை தான் செய்திருக்கிறாற்கள். ஆண் என்ன தான் தான் தன் மனைவியை கட்டி போட்டாலும் தன் மகளென்று வரும் போது பாசம் அவனை கட்டி போட்டு விடும் , சுதந்திரமும் துளிரும் - அவள் மீது அக்கறை மட்டும் அந்த சுந்ததிரத்தை சுருக்கும்.
cut the crap !- இந்த பாடலில் நான் ரசித்த சில வரிகள்!
செலவ மகள் அழுகை போல் ஒரு சில்லென்று சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகை போல் யுக பூகளுக்கு புன்னகைக்க தெரிய வில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முதுக்கள் தெரிக்கின்ற மழலை போல முன்னூறு மொழிகளில் வார்தைகள் இல்லை.
தந்தைக்கும் தாயமுதம் சுரந்தம்மா..என் தங்கத்தை மார்போடு அனைக்கையலே !
normally , நான் இசையை மட்டும் தான் கவனிப்பேன். அதன் ஒவ்வரூ ஸ்வரத்தையும் ரசிப்பேன். இப்பொழுது வார்த்தையும் ரசிக்க காரணம்- வித்யசாகரா? வைரமுத்துவா ? பிராகஷ் ராஜ .....யாரும் இல்லை - என் பெண் குழந்தை தான் !
Labels:
abhium naanum,
father daughter,
vaa vaa,
vidyasaagar
Friday, January 02, 2009
நான் கடவுள் - by Illayraaja
நான் கடவுள் பாடல்களுக்கு என்ன மாத்திரி விமர்சனத்தை எழுதுவதென்று தெரிய வில்லை - சிவோஹம் பாடலை கேட்டால் நம்மை AC ரூமிலிருந்து , இமய மலைக்கு கொண்டு செல்கிறது. சிரேயாவின் 'கண்ணில் பார்வை' பாடலும் சரி , வரிகளும் சரி - ஒரு பிச்சைகாரிக்கு எழுதினாலும் செல்வ செழிப்புடன் இருக்கிறது. மாதாவின் உன் கோவிலில் பாடலும் , அம்மா உன் பிள்ளை பாடலும் பழைய வீட்டிற்க்கு புதிய , அதே சமயம் பாரம்பரியத்தை கெடுக்காத வண்ணம்.
பிச்சை பாத்திரம் பாடல் - ஒரு பக்தி பாடலை சினிமாவிற்க்கு உபயோகித்தன் மூலம் , பாடலின் பின்னனி இசையும் , அந்த பாவமும் தான் பாடலின் உணர்வை பிரதிபலிகிறது , ராகம் மட்டுமில்லை யென்பதை நிருபிகிறது. ஒரே கடுப்பு - ஒரு பத்து இல்லை பதினைந்து நிமிடதிற்க்கு பின்னனி இசையிலிருந்து CD yil போட்டு இருக்கலாம்- வாங்குபவர்களுக்கு அது value addஆக இருந்து இருக்கும்.
பிச்சை பாத்திரம் பாடல் - ஒரு பக்தி பாடலை சினிமாவிற்க்கு உபயோகித்தன் மூலம் , பாடலின் பின்னனி இசையும் , அந்த பாவமும் தான் பாடலின் உணர்வை பிரதிபலிகிறது , ராகம் மட்டுமில்லை யென்பதை நிருபிகிறது. ஒரே கடுப்பு - ஒரு பத்து இல்லை பதினைந்து நிமிடதிற்க்கு பின்னனி இசையிலிருந்து CD yil போட்டு இருக்கலாம்- வாங்குபவர்களுக்கு அது value addஆக இருந்து இருக்கும்.
Labels:
arya,
bala,
illayaraaja,
naan kadavul
போதுமடா சாமி !!!!
1) ஒரு சப்பை கதையை எடுத்து கொண்டு அதை non-linear ஆக பிரித்து , ஏதோ Roshmon படம் எடுத்த மாதிரி நமது இயக்குனர்கள் ஒரு square frame கண்ணாடி போட்டு கொண்டு பிற்றி கொள்வது !
2) அழுத்தாமாக இருக்க வரவேண்டிய காட்சிகளில் கூட ஏதோ மணிரத்னத்தின் வாரிசாக தன்னை நினைத்து கொண்டு , 'ஏன்' ' அப்பா', ' பிணம்' போன்ற வசனகளை மட்டும் வைத்து , ஏதாவது கேட்டால் cinema is a visual medium யென்று நமக்கே pump அடிக்க வேண்டியது !
3) கதாநாயகி அறிமுக காட்சியில் அவரை நாயுடு ஹாலுக்கு இலவசமாக விளம்பரபடுத்துகின்ற மாதிரி ஒடுவது !
4) 'ஏலே, வாலே போன்ற வார்த்தைகளை மட்டும் உபயோகித்து திருநெல்வேலி nativityயை காட்டியவாறு பிற்றி கொள்வது !
5) ஊரில் பல மின்சார வயர்கள் அறுந்து கிடக்க இவர்கள் ஏதோ ஜாக்கி ஜான் தம்பி மாதிரி அந்த வயர்களை வைத்து சண்டை காட்சிகள் போட்டு விட்டு , matrix பாணியில் சண்டை காட்ச்சிகள் இருப்பகதாக பொங்கல் தினத்தன்று பேட்டி காணும் ஒரு ஜல்சா figure யிடம் பீலா உடுவது !
6) ஒரே ஒரு படதிற்க்கு பாடி விட்டி airtel super singer நிகழ்ச்சிக்கு நடுவராக போவது !
7) தயாரிப்பாளரின் மகன் என்ற ஒரு தகுதியை வைத்து, பைனாசியர் மகன் என்ற ஒரு தகுதி மட்டும் இருக்கும் ஒரு மாமாவை ஹீரோவாக போட்டு அதற்க்கு ArRehman அல்லது யுவன் இசையை போட்டு படம் இயக்குவது !
8) என்னுடய கதையை யாரும் படமாக்க விரும்ப வில்லை , யாரும் நடிக்க மறுக்கின்றனரென்று உட்டான்ஸ் விட்டு , ஒரு gulfi figure ai கதாநாயகியாக போட்டு , தொட்டு கொள்வதர்க்கு வடிவேலையோ விவேக்கையோ போட்டு சொந்த படம் எடுப்பது .
9) ஒரு படத்தை தமிழில் எடுத்து , அதை தெலுங்கில் ரீமேக் செய்து , அதை பாத்து கன்னாடவில் ஒருவர் படமெடுத்து , அதை திரும்பி இங்கே நம்ம இளைய நாயர்களை வைத்து பட்மெடுத்து நமக்கு ஆப்பு வைப்பது !
10) கிராமங்கள் புதன் கிரஹத்தில் இருப்பது போல படமெடுக்கும் இந்தி பட உலகில் , இரண்டு படங்கள் வேலை செய்து , இந்தி படங்கள் தான் நன்றாக இருக்கின்றன யென்று பேட்டி கொடுக்கும் ஒளிபதிவாளர்கள்!
2) அழுத்தாமாக இருக்க வரவேண்டிய காட்சிகளில் கூட ஏதோ மணிரத்னத்தின் வாரிசாக தன்னை நினைத்து கொண்டு , 'ஏன்' ' அப்பா', ' பிணம்' போன்ற வசனகளை மட்டும் வைத்து , ஏதாவது கேட்டால் cinema is a visual medium யென்று நமக்கே pump அடிக்க வேண்டியது !
3) கதாநாயகி அறிமுக காட்சியில் அவரை நாயுடு ஹாலுக்கு இலவசமாக விளம்பரபடுத்துகின்ற மாதிரி ஒடுவது !
4) 'ஏலே, வாலே போன்ற வார்த்தைகளை மட்டும் உபயோகித்து திருநெல்வேலி nativityயை காட்டியவாறு பிற்றி கொள்வது !
5) ஊரில் பல மின்சார வயர்கள் அறுந்து கிடக்க இவர்கள் ஏதோ ஜாக்கி ஜான் தம்பி மாதிரி அந்த வயர்களை வைத்து சண்டை காட்சிகள் போட்டு விட்டு , matrix பாணியில் சண்டை காட்ச்சிகள் இருப்பகதாக பொங்கல் தினத்தன்று பேட்டி காணும் ஒரு ஜல்சா figure யிடம் பீலா உடுவது !
6) ஒரே ஒரு படதிற்க்கு பாடி விட்டி airtel super singer நிகழ்ச்சிக்கு நடுவராக போவது !
7) தயாரிப்பாளரின் மகன் என்ற ஒரு தகுதியை வைத்து, பைனாசியர் மகன் என்ற ஒரு தகுதி மட்டும் இருக்கும் ஒரு மாமாவை ஹீரோவாக போட்டு அதற்க்கு ArRehman அல்லது யுவன் இசையை போட்டு படம் இயக்குவது !
8) என்னுடய கதையை யாரும் படமாக்க விரும்ப வில்லை , யாரும் நடிக்க மறுக்கின்றனரென்று உட்டான்ஸ் விட்டு , ஒரு gulfi figure ai கதாநாயகியாக போட்டு , தொட்டு கொள்வதர்க்கு வடிவேலையோ விவேக்கையோ போட்டு சொந்த படம் எடுப்பது .
9) ஒரு படத்தை தமிழில் எடுத்து , அதை தெலுங்கில் ரீமேக் செய்து , அதை பாத்து கன்னாடவில் ஒருவர் படமெடுத்து , அதை திரும்பி இங்கே நம்ம இளைய நாயர்களை வைத்து பட்மெடுத்து நமக்கு ஆப்பு வைப்பது !
10) கிராமங்கள் புதன் கிரஹத்தில் இருப்பது போல படமெடுக்கும் இந்தி பட உலகில் , இரண்டு படங்கள் வேலை செய்து , இந்தி படங்கள் தான் நன்றாக இருக்கின்றன யென்று பேட்டி கொடுக்கும் ஒளிபதிவாளர்கள்!
Labels:
2008 resolutions,
enough,
tamil cinema
Monday, December 22, 2008
பொம்மலாட்டம் - பார் அது ராஜா !
பொம்மலாட்டம் - பார் அது ராஜா !
ஒரு சினிமா படத்தின் விமர்சனத்தை எதிலிருந்து ஆரம்பிப்தென்று தெரிய வில்லை. நான் பின்னணி இசையிலிருந்து ஆரம்பிக்கிறேன் . பின்னி இசை ஒரு படத்தை முன்னணியில் வைக்க வேண்டும். நெருப்பின் அருகே குளிர் காயும் வெப்பத்தை , இரவின் கறுப்பை , திசை தெரியாதை பயத்தை , வார்த்தைகள் இல்லாமல் இசையால் பார்ப்பவரின் மனதில் அந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் - பின்னணி இசை சேர்த்து நம்மை படத்தின் கருவிலிருந்து பிரித்து விட்டார் மாண்டி ( தேவதாஸ், sawariyaa படத்திற்கு பின்னணி சேர்த்தவர்) . மிகவும் நுட்பமாக சொல்ல பட்ட காட்சிகளை தலையில் சுத்தியல் போல அடித்து முடிந்த வரை , காட்சியன் தீவிரத்தை காலால் மிதித்து குப்பையில் , அவர் உபயோகித்த keyboard உடன் போட்டு விட்டார்.
அதுவும் பொம்மலாட்டம் மாதிரி கதையமைப்பை கொண்ட படங்களுக்கு - கதையை சுருக்க சொன்னால்- சில கொலைகள் நடந்து , சில கதை மாந்தர்களின் குணாதசியங்களை காட்சிகள் மூலம் விளக்கி சந்தேகங்களை தூவி , ஒரு காட்சி குவியலில் இறுதியில் யார் கொலையாளி என்பதை சொல்லு கிருறார் . யார் கொலைகளை செய்தார் என்பதை கண்டுபிடித்து விடாலாம் - ஆனால் என் கொலை செய்தார் என்பதை கைகளில் பத்து ராசி மோதிரம் போட்டாலும் கண்டு ப்டிகிக்க முடியாது.
நானா படேகரின் பார்வை , அவரின் ஹிந்தி உச்சரிப்பிற்க்கு நிழலகள் ரவி கொடுத்த டப்பிங்கை தாண்டி பிரகாசிக்கிறது.படத்தில் வரும் படத்தில் வரும் கதாநாயகியின் தேர்வு இறுதி காட்சியில் தான் புலபடுகிறது. ஒரு நமிதாவையோ, நயந்தாராவையோ போட்டு இருந்தால் நம்பும் படியாக இருந்திருகாது.ஒரு இயக்குனராக புகழில் குளித்தாலும், கலையை ரசித்தாலும் அதற்க்கான விலையை ரஞ்சிதாவின் கேரக்ட்டரில் தெரிகிறது.பொதுவாக இந்த மாதிரி thriller படங்களில் , கதையின் பிராதான பாத்திரத்தின் வாழ்க்கயில் சில கோனல்கள் இருக்கும் . இந்த படத்திலும், நானா படேக்கரின் பாத்திரத்திலும் அப்படியே!
படத்தில் எல்லா பாத்திரத்தின் மேலும் சந்தேக நிழலலை பிச்சுகிறார்- அர்ஜுன் பாத்திரம் , ஒரு CBI யாக இருந்தாலும் , அவரின் காதல் , அதற்க்கு நானா படேக்கரின் குறிக்கீடு, அதனால் அவர் இதயத்தில் தோன்றும் வன்மம் , எல்லாம் இந்த படதிற்க்கு ஒரு பலம் - காஜல் அகர்வாலின் பாத்திரதிற்க்கு பொருந்தாத உடையும் , வசனமும் மட்டும் தான் த்ருஷ்டி.ஏனோ இந்த படத்தை ஹமிழில் இயக்கி , இளையராஜாவை போட்டு பண்ணி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதை மட்டும் ஒதுக்க முடிய வில்லை .
மொதத்தில் , நல்ல படம் - பாரதி ராஜவின் பட்டறயிலிருந்து !
சுருக்கமாக - கிருஷ்ணவேனியில் பார்த்தும் இந்த படம் பிடித்து இருந்தது .
ஒரு சினிமா படத்தின் விமர்சனத்தை எதிலிருந்து ஆரம்பிப்தென்று தெரிய வில்லை. நான் பின்னணி இசையிலிருந்து ஆரம்பிக்கிறேன் . பின்னி இசை ஒரு படத்தை முன்னணியில் வைக்க வேண்டும். நெருப்பின் அருகே குளிர் காயும் வெப்பத்தை , இரவின் கறுப்பை , திசை தெரியாதை பயத்தை , வார்த்தைகள் இல்லாமல் இசையால் பார்ப்பவரின் மனதில் அந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் - பின்னணி இசை சேர்த்து நம்மை படத்தின் கருவிலிருந்து பிரித்து விட்டார் மாண்டி ( தேவதாஸ், sawariyaa படத்திற்கு பின்னணி சேர்த்தவர்) . மிகவும் நுட்பமாக சொல்ல பட்ட காட்சிகளை தலையில் சுத்தியல் போல அடித்து முடிந்த வரை , காட்சியன் தீவிரத்தை காலால் மிதித்து குப்பையில் , அவர் உபயோகித்த keyboard உடன் போட்டு விட்டார்.
அதுவும் பொம்மலாட்டம் மாதிரி கதையமைப்பை கொண்ட படங்களுக்கு - கதையை சுருக்க சொன்னால்- சில கொலைகள் நடந்து , சில கதை மாந்தர்களின் குணாதசியங்களை காட்சிகள் மூலம் விளக்கி சந்தேகங்களை தூவி , ஒரு காட்சி குவியலில் இறுதியில் யார் கொலையாளி என்பதை சொல்லு கிருறார் . யார் கொலைகளை செய்தார் என்பதை கண்டுபிடித்து விடாலாம் - ஆனால் என் கொலை செய்தார் என்பதை கைகளில் பத்து ராசி மோதிரம் போட்டாலும் கண்டு ப்டிகிக்க முடியாது.
நானா படேகரின் பார்வை , அவரின் ஹிந்தி உச்சரிப்பிற்க்கு நிழலகள் ரவி கொடுத்த டப்பிங்கை தாண்டி பிரகாசிக்கிறது.படத்தில் வரும் படத்தில் வரும் கதாநாயகியின் தேர்வு இறுதி காட்சியில் தான் புலபடுகிறது. ஒரு நமிதாவையோ, நயந்தாராவையோ போட்டு இருந்தால் நம்பும் படியாக இருந்திருகாது.ஒரு இயக்குனராக புகழில் குளித்தாலும், கலையை ரசித்தாலும் அதற்க்கான விலையை ரஞ்சிதாவின் கேரக்ட்டரில் தெரிகிறது.பொதுவாக இந்த மாதிரி thriller படங்களில் , கதையின் பிராதான பாத்திரத்தின் வாழ்க்கயில் சில கோனல்கள் இருக்கும் . இந்த படத்திலும், நானா படேக்கரின் பாத்திரத்திலும் அப்படியே!
படத்தில் எல்லா பாத்திரத்தின் மேலும் சந்தேக நிழலலை பிச்சுகிறார்- அர்ஜுன் பாத்திரம் , ஒரு CBI யாக இருந்தாலும் , அவரின் காதல் , அதற்க்கு நானா படேக்கரின் குறிக்கீடு, அதனால் அவர் இதயத்தில் தோன்றும் வன்மம் , எல்லாம் இந்த படதிற்க்கு ஒரு பலம் - காஜல் அகர்வாலின் பாத்திரதிற்க்கு பொருந்தாத உடையும் , வசனமும் மட்டும் தான் த்ருஷ்டி.ஏனோ இந்த படத்தை ஹமிழில் இயக்கி , இளையராஜாவை போட்டு பண்ணி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதை மட்டும் ஒதுக்க முடிய வில்லை .
மொதத்தில் , நல்ல படம் - பாரதி ராஜவின் பட்டறயிலிருந்து !
சுருக்கமாக - கிருஷ்ணவேனியில் பார்த்தும் இந்த படம் பிடித்து இருந்தது .
Labels:
arjun,
BGM,
bommalaatam,
monty,
nana patekar
Wednesday, December 17, 2008
Kizakku Pathippagam
கிழக்கு பதிப்பகம் ஒரு அருமையான யோசனையொன்றை செய்து இருக்கிறது. குறிப்பிட்ட சிலா புத்தங்களை இலவசமா சிலருக்கு அனுப்பி வைத்து அதை விமர்சனம் செய்ய சொல்லு கின்றனர். தங்களின் விமர்சனத்தை அவர்களின் இணைய தளத்தில் போட வேண்டும் . அவ்வளவு தான் .
நான் "heroes or villains - srilankan circa 2007' என்ற புத்தகத்தை எடுத்து கொண்டைன் . படித்த சில பக்கங்களில் தெரிந்தது - இது ஒரு வருடமாய் தலையங்கங்களின் குவியலனென்று. இதை படிக்க LTTE பற்றி சிறிது தெரிந்து இருக்க வேண்டும். என்னுடைய கிரங்கங்கள் நன்றாக இருந்தன . மருதன் (அருனனா?) LTTE parri எழுதிய புத்தகம் என்னிடம் சொல்லமால் என்னுடைய அலமாரியில் இருந்தது . அதை முதலில் படிக்க வேண்டும் போல !
நான் "heroes or villains - srilankan circa 2007' என்ற புத்தகத்தை எடுத்து கொண்டைன் . படித்த சில பக்கங்களில் தெரிந்தது - இது ஒரு வருடமாய் தலையங்கங்களின் குவியலனென்று. இதை படிக்க LTTE பற்றி சிறிது தெரிந்து இருக்க வேண்டும். என்னுடைய கிரங்கங்கள் நன்றாக இருந்தன . மருதன் (அருனனா?) LTTE parri எழுதிய புத்தகம் என்னிடம் சொல்லமால் என்னுடைய அலமாரியில் இருந்தது . அதை முதலில் படிக்க வேண்டும் போல !
Thursday, December 04, 2008
Liked Ghajini , didnt SDM !
Somehow ,somehow the oscar nominated Slum Dog..OST didnt find a place in my current play list . i have heard it once in music india online and was unimpressed. It was loud , noisy and never sticked in my memory . It lacked emotion or any background. I understand quite number of people liked it . Let me try couple of times , probably it may change .
On the other hand Ghajini impressed if not in totality , atleast with latoo , Beka , Kaise Mujhe ( esp instrumental) and guzaariSh . It had some emotional tone to it , somehow it reminded me my delhi days and i found some emotional attachment to it .
On the other hand Ghajini impressed if not in totality , atleast with latoo , Beka , Kaise Mujhe ( esp instrumental) and guzaariSh . It had some emotional tone to it , somehow it reminded me my delhi days and i found some emotional attachment to it .
Sunday, November 23, 2008
Ads ads hell !
I love Ads - but then the no of ads shown in a cricket match is a steep disregard for the game - this happens probably only in cricket, that too in INDIA .
If you see Tennis - there is an opportunity for 2 min ad for every 2 games , but they don't do it always - they show other tennis matches during it or something related to tennis.NEO , STAR , ESPN , please respect the game sir !
If you see Tennis - there is an opportunity for 2 min ad for every 2 games , but they don't do it always - they show other tennis matches during it or something related to tennis.NEO , STAR , ESPN , please respect the game sir !
Friday, October 24, 2008
Sundar C babu
Nope , Nope - This is not yet another long post . I feel this guy is quite impressive with his unique sounds . Esp his bGM for Vellithirai and Anjaathey are just superb !
When everybody breaks the skin of the drum for folk songs , he mixes vocal harmony in a clean way .
Hopefully he gets more chances to produce such stuff !
When everybody breaks the skin of the drum for folk songs , he mixes vocal harmony in a clean way .
Hopefully he gets more chances to produce such stuff !
Labels:
anjathey,
sundar C babu
Ananda Thandavam- Yes !
if somebody asks me if i like GV Prakash - my answer is , ' Im not sure , what movies has he composed ?'. Not that i haven't heared his songs , but somehow his songs don't stick beyond 1 month or so . Probably couple of songs in Kreedam is an exception , other than i haven't found a month-more attraction to his songs .
If you can forget the harris followed, Rehmanish guitar pieces in the second interlude, everything about kalil Aadum is splendid - Benny iss superb , and the unusual rythm joins him in making the song truly delightful.SHankar Mahadevan adds one more hit , previous being Hey baby from Aegan , and this one contrasting to it - 'Megam Pola' - starts with an uncomortable sound that translates to a hindustani kind of song - probably the singer is quite apt since he has composed and sung such a number in 'Breathless' .
Nithyashree , vinitra and shuba mudgaal croon in Kanaa KaaNgiraen - i havent heard of subha much , but her numbers in raincoat (hindi/Bengali) were quite delightful. The opening isn't impressive , but the energetic rythms and Nithyashree's solid singing makes it up - its intresting how many songs can be tuned for a marriage kind of situation ! Again why rehmanish's sitar !
Shreya's midas touch continues in this vidyasagar kind of song- Povinai and to an extent shreya resembled the chameleon singer CHinmayee .Charanam - exactly haunting as Vidyasagar ! WOW ! some strange reason , i don't like Naresh Iyer and pattu Poochi doesn't do anything to change it - kiddish voice , Karthik woulkd have done a good job for this song ! Not a bad song ,actually.
This leaves with the theme music - can't wait , im ready to visit the theater - did it have anything to inspire GVP to give such a nice score ?
Score - 40/50
If you can forget the harris followed, Rehmanish guitar pieces in the second interlude, everything about kalil Aadum is splendid - Benny iss superb , and the unusual rythm joins him in making the song truly delightful.SHankar Mahadevan adds one more hit , previous being Hey baby from Aegan , and this one contrasting to it - 'Megam Pola' - starts with an uncomortable sound that translates to a hindustani kind of song - probably the singer is quite apt since he has composed and sung such a number in 'Breathless' .
Nithyashree , vinitra and shuba mudgaal croon in Kanaa KaaNgiraen - i havent heard of subha much , but her numbers in raincoat (hindi/Bengali) were quite delightful. The opening isn't impressive , but the energetic rythms and Nithyashree's solid singing makes it up - its intresting how many songs can be tuned for a marriage kind of situation ! Again why rehmanish's sitar !
Shreya's midas touch continues in this vidyasagar kind of song- Povinai and to an extent shreya resembled the chameleon singer CHinmayee .Charanam - exactly haunting as Vidyasagar ! WOW ! some strange reason , i don't like Naresh Iyer and pattu Poochi doesn't do anything to change it - kiddish voice , Karthik woulkd have done a good job for this song ! Not a bad song ,actually.
This leaves with the theme music - can't wait , im ready to visit the theater - did it have anything to inspire GVP to give such a nice score ?
Score - 40/50
Labels:
ananda thandavam,
gandhi krishna,
GV prakash,
GVP,
pririvom santhipom,
sujatha
Thursday, October 09, 2008
Aegan - Not home food !
Raaja made me listen JAZZ through his spectrum of songs in 80s and it rejuvenated with Kurangu Kayil Maalai and rehman continued it with SIllinu Oru Kadhal . Yuvan suceed to a large extent in Hey Baby with Shankar fitting to a T , esp the change in pitch at the end and the 'Malikka I love you' part - APT !
Hey Saala has all singers that i don't care ( yeah including Naresh Iyer , a bit kiddish) and a music thats resembling Rehman , if you listen to New New song ,Taxi Taxi , but in the end is foot tapping .Odum varayil confused me with the Pallavi/anu pallavi offering dose of advise and my mind imagining Ajith literally singing it , but then nayantara(hopefully) takes over charanam with the female voice (Bele shinde- KR find in Chakravuyham) and the melody as soft as her skin ! yahoo yahoo does nothing to improve the situation the web leader , but didnt make me hit the forward button , atleast for today !
Kichu Kichu starts like a Imaan song , then revisits Billa's sleeze mood a bit and finally settles to a band of average to good music .Thinking again , the tune is actually raaja's 80s but made opaque by yuvan's Synth orchestration.
This is plastic music , pizza food , short lived- but you do eat pizza , because beneath the facade of health concerns the momentary joy you get in biting that cheese is indeed nice :)
Score - 37/50
Hey Saala has all singers that i don't care ( yeah including Naresh Iyer , a bit kiddish) and a music thats resembling Rehman , if you listen to New New song ,Taxi Taxi , but in the end is foot tapping .Odum varayil confused me with the Pallavi/anu pallavi offering dose of advise and my mind imagining Ajith literally singing it , but then nayantara(hopefully) takes over charanam with the female voice (Bele shinde- KR find in Chakravuyham) and the melody as soft as her skin ! yahoo yahoo does nothing to improve the situation the web leader , but didnt make me hit the forward button , atleast for today !
Kichu Kichu starts like a Imaan song , then revisits Billa's sleeze mood a bit and finally settles to a band of average to good music .Thinking again , the tune is actually raaja's 80s but made opaque by yuvan's Synth orchestration.
This is plastic music , pizza food , short lived- but you do eat pizza , because beneath the facade of health concerns the momentary joy you get in biting that cheese is indeed nice :)
Score - 37/50
Labels:
aegan,
ajith,
jazz,
raju sundaram,
yuvan shankar raja
Sunday, October 05, 2008
Identify which song ! (KR)
I was inspired by suresh's post where he had Interludes in his post and we had to identify the song.
He had doen it for raaja , im doing it for his first son. I didnt know how to use hipcast ( it was a paid service) , so have uploaded the interludes here .
Answers in few days ,if at all i get any answers :)
Comments will appear after answers are revealed !
He had doen it for raaja , im doing it for his first son. I didnt know how to use hipcast ( it was a paid service) , so have uploaded the interludes here .
Answers in few days ,if at all i get any answers :)
Comments will appear after answers are revealed !
Labels:
karthik raaja,
Karthik raja
Subscribe to:
Posts (Atom)