Wednesday, December 23, 2009

Vetti karan



Words stop short of the experience by name 'Vettaikaran' . Inspite of 4 cousins joining after 3 years , 2 kids , fans all around , almost a full house - the movie was a damp squib, easily the worst of the year i have seen. But then there are few points to be noted


1) Henceforth, all Building contractors will approach Vijay - as he with his 3 inch - circumferential handwrists is able to break concrete and smash into pieces. More use of vijay, less cost, no earth movers , buldozers !

2) How stills cheat - anushka is plain bad , be it make up , angles, expressions - she is a big zero nor neither has good screen presence.

3) The movie shuld have been titled 'Birds' - our hero mostly flies , esp in stunts !!

4) I really wonder if the dubbing of all long haired villains is by the same guy - irrespective of the director, the big stupid laugh , long hairs , talks which kill your ears.

5) There is one scene which got the maximum appreciation-When we lost power in the theater, everybody roared with whistles.

6) There was aheavy rush at the theatre , huge fights, shouts , gate crashing - all happened , not at the start but at the end to escape from the theater.

7) Despite different religion, caste , creed, everybody had the same opinion ' Most movie of the year'

8) The balcony was full - later i realised that most people who watched were the ones who old puffs, ice creams in thesame theatre.

9) Movies like these have something useful- people buy watches to know know how precious your time is !

Sunday, November 15, 2009

Kandaen Kadhalai Review


காதலை மைய்யமாக வைத்து எடுக்க பட்ட படங்களை நான் பொதுவாக பார்ப்பதில்லை. அதில் கதாபாதிரங்கள் கேலி சித்திரமாக இருக்கும். உண்மை இருக்காது. எதார்த்தம் இருக்காது. திரை கதையில் முடிச்சுகள் இருக்க வேண்டுமென்பாதற்க்காக கதாபாதிரத்தின் தன்மை மாறும்.இங்கே பிரச்சனை எதார்த்தம் தான். இப்படியும் நடுக்குமோ யென்று திரை அரங்கில் யோசிக்க வைத்து விட்டால் அந்த படம் பப்படம் தான். அவன் யோசிக்காதவாறு அமேரிக்காவில் ஒரு பாடல், வடிவேலின் ஹாஸ்யம், கயறு போட்டு சண்டை - இப்படி கவனத்தை திருப்பி சரி செய்வார்கள்.

இதில் விதிவிலக்காக சில படங்கள் - உதாரணமாக 'காதல்' திரைப்படம். திராவிட நிறம் உள்ள இருவர் காதலை இந்த 2000ல் சுவையாக சொல்ல முடியுமென்பதை நிருபித்த படம்.எதார்த்தை மீறும் பொழுது சில மேல சொன்ன சில ஒட்டல்கள் தேவை படுகின்றது. இந்த படத்தில் அஞ்சலி ( தமன்னா- 1990ல் ஜோதிகா நடித்திருப்பார்)கதாபத்திரம் நிஜ வாழக்கயில் நாம் பார்க்க முடியுமா ? இதில் பிரச்சனை எதை எதார்த்த்மென்று சொல்கிறோமென்பதை பொறுத்து தான் அமையும். இது என்ன முட்டாள் தனமாக இருக்கிறது ( இதை விட சந்தோஷ் சுபிரமணியம் படத்தில் வரும் ஜேனீலீயாவின் கதாபாதிரம் மிகவும் முட்டாள் தனமாக இருக்கும் ) யென்று யோசிக்கும் முன்பே அதற்க்கு விடை கிடைத்து விட்டது - எனக்கு இரண்டு இருக்கை தள்ளி உட்கார்ந்து இருக்கும் ஒரு அம்மணியிடம் . கிட்டதட்ட அஞ்சலி காதபாதிரத்தின் பிம்பமாக தான் நடந்து கொண்டார். காதாலில் தோல்வியுற்ற ஷக்தியும் ( பரத்,உயரம் கொஞ்சம் கூட இருந்தால் கச்சிதமாக இருக்கும் ) , அந்த அந்த தருணத்தை முழுமையாக , குதுகோலமாக கொண்டாடும் அஞ்சலியும் ஒரு ரயில் பயணத்தில் ( வழக்கம் போல ) எதேச்சையாக சந்திக்கின்றனர்.அதில் இருந்து அவ்ர்களின் வாழ்க்கை மாறி , காதல் புகுந்து என்னா ஆகிரதென்பது தான் கதை.


இந்த மாதிரி கதைகளில் - கதாநாயகன், நாயகி அழகாக தான் இருக்க வேண்டும். அந்த ஜோடி கார், பஸ், பாடல், ரயில் பயணம் - இப்படி பல விஷயங்களில் நடுவே காதல் முளைக்க வேண்டுமென்றால் , அழகாக தான் இருக்க வேண்டும்.அந்த வகயில் கச்சிதமாக பொருந்துகின்ரனர். பரத்தின் மனமாற்றமும்,வெண்பஞ்சு பாடலும் ( வித்யாசாகர் ,) கச்சிதமாக பொருந்துகிரது. ஒரு அழகான, உற்ச்சாகம் சுற்றி வரும் ஒரு பெண்ணுடன் சில நாட்க்கள் கழித்தால் , அவள் மீது , இன்னொருவரை அவள் காதலித்தாலும் , ஒரு ஈர்ப்பு வருமென்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லியுள்ளார். இதை ரோஜாகூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த் காதபாதிரத்துடன் ஓப்பிட்டு பாருங்கள் , அதில் உள்ள செயர்க்கைதனம் ந்ன்றாக தெரியும்.

ஆனால் , பிரச்சனை இங்கு தான் ஆரம்பிகிறது- எப்படி எடுத்து செல்ல வேண்டுமென்பதில் கொஞ்சம் குழப்பம் உள்ளது போன்று தோன்றுகிறது. இந்த குழப்பம் ' காதல் செய்கிறேன், ஆனால் அவள் இன்னோருவரை காதலிக்கிறார்' - இதை கையாழ்வதில் நமது விக்கிரமனின்வழியை ஏடுக்கிறார்( வேறென்ன , அவள் காதல் ஒன்று செய்வதற்க்கு, இதயத்தை கிழித்து முயற்ச்சி செய்வது). இங்கு தான் எனக்கும் படதிற்க்கும் தூரம் ஆரம்பிக்கிறது.ஒரு படத்திலாவது உணர்ச்சிகளை வெளிபடுத்தும் கதாபாதிரமாக யாராவது வடிவமைக்க மாட்டார்களா? இல்லை , இந்த குழப்பம் தான் யதார்த்தமா ?இந்த இடத்திலிருந்து பாடல் ,mistaken identity, ஜல்லி காரணதிற்காக உண்மை சொல்ல முடியாமல் போவது , பல பல படங்களில் பார்த்து , துவைத்து போன காட்ச்சிகள் தான்.

jabe we met நான் பார்த்ததில்லை. வெறும் காட்சிகள்- திருப்பு முனை வைத்து நகரும் திரைகதைகளில், முதன்மை கதாபாதிரமேற்று நடிக்கும் நடிகர்களின் ஆயாச நடிப்பில் தான் பார்வையாளர்களை கவர முடியும். அந்த விதத்தில், பரத்தும், தமன்னாவும் அருமையாக நடித்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சம் மணிரத்தினத்தின் கதாபாதிரத்தின் சாயலில் அஞ்சலி கதாபாதிரம். கொஞ்சம் தவறி நடித்தாலும் முட்டாள்தனமாக அமைந்து விடும். அந்த விதத்தில் ,தமன்னாவிற்க்கும், அவர்களுக்கு dubbing கொடுத்த அம்மணிக்கும் பாராட்டுக்கள்.காதலும் , தவிப்பும் , உணர்ச்சிகள் அடக்கம் - இப்படி மாற்றி மாற்றி வருவதால் வித்யாசாகர் தன் திறமையை பாடல்களுடன் நிறுத்தியுள்ளார், பின்னனி,பின்னனி தான்.

உண்மையான காதல் படதிற்க்கு காத்து கிடக்க வேண்டும்.

Saturday, November 14, 2009

Paa - Music review




'பா' பட பாடல்களை கேட்டு கொண்டு இருக்கும் பொழுது , எனக்குள் பல கேள்விகள் எழுந்தன ? குறிப்பாக ஒரு இசையமைப்பாளரின் ரசிகனாக இருந்து கொண்டு , இசையை , எதிர்பார்ப்பு இல்லாமல் , ஏதேச்சையாக ஒரு அருவி தென்பட்டு அதை பார்த்து ரசிப்பதை பார்க்கும் விதமாக ரசிக்க முடியுமா? கொஞ்சம் கஷ்டம் தான். இப்படி இசையை பருகுவது, நமது இசை உடம்பிற்க்கு நல்லதா ? இதே பாடல்களை ஒரு இரண்டு வாரத்திற்க்கு பிறகு கேட்டால் எப்படி இருக்கும்?இன்னும் ரசித்து இருக்க முடியுமோ?

பல வித எதிர்ப்பார்ப்பு - இளைய ராஜா வட இந்திய ரசிகர்களை கவருவாரா ? அவருடய இசை, வெகு ஜன மக்களின் iPodல் ஒலிக்கும்மா ? கொஞ்சம் கவலையும் , எதிர்ப்பார்ப்புடன் தான் இந்த பட பாடள்கலை அனுகினேன். குறிப்பாக இந்த வருடத்தில் வந்த அவரின் பாடல்கள் கொஞ்சம் நம்பிக்கை தந்தது.குறிப்பாக வால்மீகி, பழசி ராஜா நன்றாக இருந்தன. மனதில் ஒட்டின.பல வருடங்களாக ராஜாவின் திறமை குறைந்துவிட்டதென்று சில பேர் கூறுகின்றனர்.அவருடய synth usage தான் ரொம்ப மோசமென்று சில பேரின் அபிபராயம்.அவருக்கு பெரிய படங்கள் கிடைக்க வில்லை - சேது, ஹேய் ராம் , விருமாண்டி பாருங்கள்- பழய ராஜவை பார்க்கலாமென்பது இன்னோரு வாதம்.

பா- முளையும் , மனதும் , கணித விதி படி வயதும் பதினைந்தை தாண்டாமல், உடம்பு மட்டும் அறுபதை தாண்டினால் என்ற சுவையான கரு. இதற்கு ராஜாவின் இசை படதிற்கு பக்க பலமாகவும் , அவரின் இசை ரசிகர்காளின் எதிர்ப்பார்ப்பிற்க்கு பலமாகவும் இருக்க வேண்டும். அதை ' மூடி மூடி' பாடல் பக்காவாக பூர்த்தி செய் கிறது. முதல் interlude ல் வரும் இசை , அவரின் இசை நரைக்க வில்லையென்பதை காட்டுகிறது. ஷில்பா ராவின் குரல் ந்ன்றாக இருக்கிறது.பாடல் முழவதும் ஒரு jazz feel இருக்கிறது. ஒரு பாடல் நவீனமாக இருக்க , jazz ஐ பயன் படுத்து கிறார்கள்.தவறு இல்லை .இதை வைத்து மட்டும் synth usage ந்ன்றாக இருக்கிரதென்று சொல்ல முடியாவிட்டாலும், முந்தய பாடல்களை விட பல படிகள் தாண்டி சுவையாக இருக்கிறது.


இதை அதிகாரமாக சொல்ல முடியாது - 'கும் சும்' போன்ற மெட்டுகளை ராஜாவால் தான் போட முடியும் ( கில்லி படதிற்க்கு பிறகு பல மொழிகள் பார்த்த ஒரு விஷயம் இந்த பாடல் தான் .). இந்த பாடலை அப்படியே பியானோவில் வாசித்து பாருங்கள் , அல்லது என்னை மாதிரி வெறும் கையில் மொழம் போட்டு விட்டு கற்பனை பண்ணி பாருங்கள். ஒரு பீதோவனும் , மோஸொர்டும் வருவார்கள். இந்த பாடலில் , குறிப்பாக , இரண்டாம் interlude ல் இலவசமாக jazz பியனோ கச்சேரிக்கு அழைத்து சொல்லுகின்றனர். குழந்தைகளுக்கு பாடுவதில் பேர் பெற்ற நமது பவதாரினி, சரணத்தை , மேல சொன்னதை நிருபிக்கும் வகை பாடியுள்ளார்.இந்த பாடல்களை இரடடை கிழவி போன்ற சொற்க்கள் நிறய வருகின்றன, நல்ல அலங்காரமாக அவை இருக்கின்றன.

கடந்த இருபது வருடமாக ஒரு ஆராய்ச்சி நடுக்கிறது. ஒவ்வோரு ராகமும் எந்த உணர்ச்சியை வெளிபடுத்தி கின்றதென்பதை.இதனை இளைய ராஜா ஓப்பு கொள்ள வில்லை . ஆவரை போறுத்த வரை , ஒருராகம் எப்படி வேண்டாலும் பயன் படுத்த முடியும்- அது அந்த இசையமை பாளரின் ஷிருஷ்டி யை பொறுத்து இருக்கிறது.உதாரணதிற்க்கு , எஜமான் படத்தில் வரும் ' ஒரு நாளும்' பாடல் ஒரு பக்தி பாடல் யென்பதை எவ்வளவு பேருக்கு தெரியும் . ஜானகியை எடுத்து , சுதா ரகு நாதானையும் , கொஞ்சம் chordsai மாற்றி கற்ப்பனை பண்ணி பாருங்கள். அதே தான் - புத்த்ம் புது காலை பாடலும் . ஒரு இரவில் ஒரு காதலன் தனக்கு முத்தம் கொடுத்து விட்டால் , மறு நாள் காலை அந்த பெண் மொட்டு எப்படி உணர்வாளோ அந்த உணர்வை தான் என்னால் கற்ப்பனை செய்ய்ய முடிகிறது. ஆனால் , இதில் - ' ஹல்கே செ ' வை கேட்டால் , முதலில் ஏமாற்றமும் , அதை தொடர்ந்து , ஆச்சர்யமும் தான் வருகிறது. பா படதில் , அந்த சிறுவன் இறந்து , இந்த பாடல போடாமல் இருந்தால் சரி - அப்படி போட்டு விட்டால் , அழுகை ஆறு தான் ஒடும் ( progeria வினால் அவதி படும் மனிதர்கள் இருபது வயது மேல் வாழ்வதில்லை . youtube ல் ஒரு விடியோ பார்த்து விட்டு அழுதேன்.ஊதாரணதிற்க்கு ஒரு தாய் progeria வந்த தன் சிறுவன் பற்றி சொல்கிறாள் ' he has started losing teeth now .. i Guess that shouldn't be a problem , as he doesn't like dஎன்டிஸ்ட்'-எப்படி பட்ட எண்ண ஒட்டங்கள் ஒட வேணுமென்பதை இன்னும் குழப்பிகிறது, வாழ்க்கயை விடையிலிருந்து வினாவிற்க்கு தள்ளுகிறது )

"தாய் எட்டு அடி பாய்ந்தால் .." பழ மொழி யருக்கு பொருந்துமோ, என் கார்த்திக் ராஜாவிற்க்கு பொருந்தாத்ன்று வலையில் பல பேர் பின்னியுள்ளனர்.எல்லாரும் ஒரு வகையில் இசை போட்டால் , இவர் இன்னொரு மாதிரி போடுவார். ஆனால் , எனக்கு இது தான் பிடித்திருந்தது. இப்பொழுது எடுத்து கொள்ளுங்கள். யுவன், பிரகாஷ், தரன் , இமான்,ப்ரெம்ஜி - இவர்களின் இசை வடிவில் என்ன வித்தியாசம் இருக்கிறது - ஒருவர் அதே இசை வடிவத்தில் நன்றாக போடுகின்றார், மற்றொருவர் சுமாரக . அவ்வளவு தான் . ஆனல் வடிவம் ஒரே மாதிரி தான் இருக்கிரது ( யுவன் இந்த கூட்டதில் முன்னோடி) . படம் பல இல்லாமல் இருக்கம் கார்திக் , 'ஹிச்கி ஹிச்கி' பாடலின் பின்னனி சேர்த்துள்ளாறென்று நினைகின்றேன். அவர் இசையில் தான் தனியாக சில இசை துளிகள் தனியாக தெரியும் , பாடலின் முதன்மை ராகதிலும் , இசை சேர்ப்பிலும் சரி - வெகு ஜன மக்களுக்கு பிடிக்கத மாதிரி இருக்கும் , கொஞ்சம் நிறய தடவை கேட்டால் , பிடித்து விடும் . குறிப்பாக முதல் interlude கேட்டு பாருங்கள்- அது முடியும் விதமும் , இரண்டாம் interlude , தனியாக இசை செருபு உள்ள இரண்டாம் சரனம் - இது கார்த்திகின் அடையாளம். அடித்து சொல்லுவேன். இந்த பாடலில் second interlude ல் திடீரென்று , பா தீம் மியுசிக் வருகிரது . ஒரு வேலை இந்த பாடல், காதல் கடந்து , காமம் புகுந்து , அந்த அன்பில் பிறக்கும் குழந்தையை குறிகின்றதோ ? மொத்ததில் பாடல் பிடித்திருந்து.

யாருக்கும் தெரியமால் ஒரு முத்து இருந்தது. பாலு மகேந்திரா அவர்களின் அது ஒரு கனா காலம் படத்தில் - "காடு வழி " பாடல். அதை ஒரு 14 வயது பயன் குரலில் அமுக்கி பாடியுல்ளார் அமிதாப். காட்ச்சியுடன் ஒட்டி உல்ள காரந்த்தினால் , நடுவில் வரும் செல்டிக் இசையை தவிர பெரிதாக கவர இல்லை. இருந்தாலும் , படதில் மிக ந்ன்றாக இருக்குமென்பது என்னுடய அனுமானம்.இந்த பாடலை re-mix பன்ணிய விதம் பிடிக்கவில்லை.

படம் வரட்டும் .பால்கி நன்றாக எடுத்து இருப்பரென்ர் நினை கின்றேன். ராஜாவின் பின்னனி சேர்ப்பை சத்தியம் திரை அரங்கில் பார்க்க வேண்டும்.

Saturday, September 19, 2009

EEram - Get wet soon !



படம் பார்ப்பதே ஒரு சுவையான அனுபவம்.நம் நடிகரின் படமென்றால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடனும், அவர் அற்புதமாக நடித்தால் திரை அரங்கில் ஆர்ப்பரிக்க வேண்டுமென்ற ஆசையும், படம் சொதப்பிவிடுமோ என்று பயமும்,போன்ற பல உணர்வுகளுடன் பார்க்கும் அனுபவம். இயக்குனருக்கு, அவர் மனதில் நினைத்த கதை வர வேண்டும், அடுத்த படம் இயக்கும் அளவிற்க்கு திரை அரங்கில் கூட்டம் குவிய வேண்டும், இப்படி இப்படி காட்சிகளை நகர்த்தினால் பார்வையாளர்கள் கடிகாரத்தை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்- என்ற திரை கதை வேண்டும். முடிவாக பார்ப்பவர்களுக்கு ' கொடுத்த காசுக்கு டைம் பாஸ்' ஆக வேண்டும்- கலை படமாக இருந்தாலும் சரி, மசாலா படமாக இருந்தாலும் சரி.

ஈரம்- ஒரு மாலை பொழுதில் என்னுடய முன்று மணி நேரத்தை எடுத்து கொண்டது, எனக்கு தெரியாமல்- என் கண்களையும், மற்ற புலன்களையும் கடத்தி சென்றது.காட்சிகள் முன்னும் ,பின்னுமாக செல்வதயும், கதாபத்திரங்கள் பல்வெறு பரிமாணங்கள் வெளிபடுவதை- அதை ஒரு கோர்வையாக சொல்வது தமனின் இசை தான். இந்த இசயில் கொஞ்சம் தவறு நடந்து விட்டாலும் கூட கேலி கூத்தாக மாறி விடும். உதாரணமாக, முதல் பாதியில் , வாசுவின் காதாலும், வாசுவின் புலன் ஆய்வும் ஒன்றொடு ஒன்றாக பினைந்து இருந்தாலும் , அதை ஒரே கோர்வையாக காட்டி இருப்பது தமன்னின் இசையும், ஒலிபதிவும் தான். நாம் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால் ,துணியில் ஈரம் ஏற்பட்டதை போல ஒரு பிரம்மை ஏற்படுகிறது.

கதை என்னவென்று பார்த்தால் - ஒரு பெண், பல கொலைகள், அவளின் முன்னாள் காதலன், கணவன், அந்த அபார்ட்மென்டில் குடி இருக்கும் நபர்கள்- சில சந்தேகங்களை தூவி , நடுவில் கொலையாளி யாரென்று கூறி, பின் பாதியில், கால பரிமாணத்தில் பின்னோக்கி சென்று, அதன் காரணமாக முடிவில் ஒரு சின்ன முடிச்சு .syd field in 3- part structure படி தான் திரை கதை இருக்க வேண்டும் என்பதில்லை. சுவார்ஸ்யமாக இருக்க வேண்டும். மக்களை கட்டி போட வேண்டும். காலையில் மனைவியுடன் போட்ட சண்டை மறக்க வேண்டும். அவ்வளவு தான்.பாலா போன்றவர்கள் , கதையில் பெரிய முடிச்சுகள் வைக்க மாட்டார்கள். கதாபாத்திரம்-, அவர்களின் குணாதசியங்கள், இது தான் முடன்மை.. இதற்க்கு மாற்றாக , மணிரத்தினம் அவர்களின் படங்களில் , கதாபாத்திரத்தின் தன்மையை விட காட்ச்சிகளின் கோர்வை தான் பிரதானம். .யோசித்து பாருங்கள்- சேது, நந்தா ( இது கொஞ்சம் விதி விலக்கு) , பிதாமகன், எல்லாவற்றுக்கும் மேலாக நான் கடவுள்-இந்த படங்களில் நமக்கு உடனே நியாபகம் வருட்வது அந்த படத்தில் இருக்கும் மைய்ய கதாபாத்திரங்கள், அவர்களின் குணாதசியங்கள். இதற்கு மாறக , மணிரத்தம் அவர்களின் படங்களில், காட்ச்களின் கோர்வை தான் பிரதானம். ஆனால் இருண்டுமே மக்களை ஐம்பது ரூபாய் செலவழிக்க செய்தது.

ஈரம் படத்தை பொறுத்த வரை - காட்சிகளின் கோர்வையும் சரி, கதாபாத்திரத்தின் குணாதசியமும் சரி , குறிப்பாக பாலு(நந்தா) வின் கதாபாத்திரம் பின் பாதியில் செதுக்க பட்ட விதமும் , அதற்க்கு சரியாக உயிர் கொடுத்த நந்தாவின் நடிப்பும் சரி ,படத்தில் வரும் கொலைகளிருந்தும், புலன் ஆயிவிலிருந்தும் கொஞ்சம் கவனத்தை இழுத்தாலும் , பார்வையாளர்களின் கவனம் படத்தில் மட்டும் இருக்க செய்தது! கவனம்-ஒவ்வரு திரைஅரங்கிலும் , படம் பார்க்கும் அனுபவம் விதியாசம். மாயாஜாலில் பார்த்தால் , கொஞ்சம் கூர்ந்து கவனிக்க முடியும் . நான் பார்த்த்தோ காரப்பாக்கம் அரவிந்தில் - கதாபாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியும் எப்பொழுதெல்லாம் அவர்களின் , குறிப்பாக கல்லுரி இளைஞர்களின் தினசரி வாழ்கையில் வரும் பேச்சுகளை நினைபடுத்துமோ, அப்பொழுதெல்லாம் ஆர்பரித்தனர், விசில் அடித்தனர். உதாரணதிற்க்கு, பாலாவின் நண்பன், 'பிறர் மனை நோக்கும்' சமாச்க்ரங்களை பற்றி பேசும் போழுது , செம விசில்.

படத்தில் பல்வேறு உணர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. தன் காதலியை அவதுறாக பேசுவதை நம்ப முடியாமல் தவிக்கும் வாசு ( மிருகம் ஆதி ,காதலனாகவும் , பின்பு காவல்காரராகவும் கதாபதிரத்தின் இரண்டு கலா பரிமாணத்தை நன்றாக செய்திருக்கிறார்),காதலில் தவித்து , கல்யாணத்தில் மிதந்து, அதில் சந்தோஷபட்டு, விதியும் , சுற்றார்களின் சூழ்ச்சியாலும் மிதக்கும் ரம்யா(சிந்து மெனான்- அற்புதமான நடிப்பு) , பின் பாதியில் வெளிப்படும் சந்தேகம்,கோபம்,பரிதாபம்- இப்படி பல ..இவை எல்லாவறிற்க்கும் அடி நாதம் - ஒலிப்பதிவு. உதாரணமாக , முன் பாதியில், வாசு கார் ஒட்டி கொண்டு பொகும் பொழுது , அவன் நினைவு பின் நோக்கி செல்கின்றன .ஆனால் , ஒலிப்பதிவு, அந்த கொலை நடந்த அந்த அழுத்த்தை நமக்கு நினைவு படுத்தி இருக்கின்றன - மழை மூலமாக,அந்த correct aana color tone மூலமாக .கொலைகள் நடக்கும் விதமும் , அகோரத்தை காட்டாமல், ஒலியும், ஓளியும் மூலமாக காட்டியிருப்பது தூள்.

படம் பார்த்து விட்டு - வெளியே வந்தேன். சொழிங்கநல்லுர்- மேடவாக்கம் 4 கிலோ மீட்டர் சாலை.மழை முடிந்து குளிர்ந்த காற்று வீசியது. என்னுடய முக்கு கன்ணாடியை மாட்டி கொண்டு பைக்கில் புறப்பட்டேன்.நான வேக வேக மாக செல்ல , காற்றும் பலமாக வீசியது.ஒரு ஐந்து நிமிடம் கழித்து , என்னுடய மூக்கு கன்ணாடியில் கொஞ்சம் கொஞ்சமாக பனி மூட ஆரம்பித்தது.சாதாரண விஷியம் தான் . இந்த படத்தை பார்த்த் பின்பு இல்லை . வண்டியை நிறுத்தினேன்.மூக்கு கண்ணாடியை கழட்டி பாக்கேட்டில் வைத்தேன்.

Saturday, July 11, 2009

நான் கற்ற பாடம்

வலைபூவில் எழுதி இரண்டு மாதம் ஆகி விட்டது. வேலையில் எல்லா பொறுப்பையும் தலை மேல் போட்டு கொண்டால் என்ன ஆகுமென்று நன்றாக தெரிந்து விட்டது.நான் கற்ற சில பாடங்கள்.

1) வேலையில் வெற்றி வர வர வாழ்க்கையில் இது மட்டும் போதுமென்றும் , மற்ற் விஷயங்களை இந்த தற்காலிக வெற்றிகள் பார்த்து கொள்ளுமென்ற ஒரு நினைப்பு வரும்.

2) இரவில் ஒரு மாததிற்க்காக மேலாக இரவு இரண்டு மணி மேலாக வேலை செய்தேன். இரவில் இரண்டு வாகனம் ஒட்டும் போது பாதி தூக்க கலக்கம் தான். ஒரு நாய் இடையில் வந்தால் கூட ஒரு சில விரல்கள் போகும் வரைக்காவது விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம்.

3)இரவில் வீட்டுசாப்புடு சாப்பிடாமல் , ஹோட்டலில் , அந்த ஹோட்டல் முதலாளி கூட சாப்பிடாத உனவை தான் சாபிட்டேன். முதலில் நெய் ரொஸ்ட் நன்றாக தான் இருந்தது. ஒரு மாதம் கழித்து , வயிரை கிழிக்க ஆரம்பித்து விட்டது.

4) கடினமாக உழைப்பில் கிடைக்கும் தாற்காலிக வெற்றியில் , என் உள்ளே இருக்கும் மற்ற கலை திறமைகள் முச்சு திணர, நுரை தத்த சாகடிக்க பட்டுள்ளது. முன்பு கதை எழுத வேண்டுமென்று தினசரி பேப்பர் படிப்பேன். இப்பொழுது அதற்க்கு கூட பேப்பரை தொடுவதில்லை.

5) முக்கியமாக குடும்பத்தில் உறவுகள் பாதிக்க படும். அழகான ஒரு வயது தேவதைவீட்டிலிருப்பது மறந்து விட்டது. மின்சார கட்டணம் முதல் , என் வண்டியியை துடைக்கும் எனது அறுபது வயது அப்பாவும் , அவரது உழைப்பும் புத்தியில் தங்க வில்லை.

6)இரவு பத்து மணிக்கு வந்து விட்டாலும் , தினமும் இரண்டு மணிக்கு தூங்குனம் பழக்கம் ஏற்பட்டு விட்டதால் , தூங்க முடியவில்லை . உடம்பில் அசதி , கண் உலகை மற்ற முயர்ச்சி செய்கின்றது.

7) இவவளவும் உழைத்த பின்பு நீ உழைப்பது பத்தாதென்று சொலுவர்கள். போதுமடாசாமி !!!

Thursday, April 23, 2009

முடிகிட்டு போ !


இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் போரினை நிறுத்த ஒரு நாள் வாழ்க்கையை, இங்கு நமது முதல் அமைச்சர் நிறுத்தியுள்ளார்.இது சரியா தவறா என்பது அப்புறம். சரியென்று வைத்து கொண்டால் கூட , எப்படி சரி ? இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடக்கின்றது. அதனால் மத்தியில் உள்ள நமது 'ஹம். ஆப்கே ஹே கவ்ன்' அரசியல்வாதிகள், இதை கண்டிப்பாக கண்டுகொள்ள மாடார்கள். அப்படியே இருந்தாலும் , எதோ காது நோண்டுவதற்க்காக இலங்கை அதிபரை எச்சில் அறிக்கை செய்வார்கள். இலங்கை போயி ஒரு மசால் வடை சாப்பிட்டு வருவார் நமது பிரானாப் முகர்ஜி.இதை ஒரு பெரிய மயிராட்டம் தினகரனில் சாதனையாக போடுவார்கள்.இவ்வளவு தான் நடக்கும். ஐம்பது வருட போரை ஒரு பந்தை வைத்து நிறுத்த முற்ப்பட்டால்?

இதில் இன்னொரு கூத்து இருக்கிறது. இலங்கையில் பொது மக்கள் LTTE யில் பிடியிலிருது வெளியேறி வருகின்றனர். சுமார் 60000 மக்கள் இது வரை வெளியேறி பாதுக்காபான இடத்துக்கு கொண்டு செல்ல பட்டனர். அதில் வெளியான செய்திகளில், புலிகள் தங்களை கேடயமாக பயன் படுத்தியதாக கூறியள்ளனர். இதற்கு நமது புலி ஆதரவாளார்கள் என்ன சொல்லுகின்றனர்? இந்த மாதிரி செய்தி வரும் போழுது அமைதி தான் . சோ மட்டும் அதை பற்றி எழுது வார் . ஆ,வி, குமுதம் யெல்லாம் அமைதி தான்.இதை வைத்து புலிகளை கண்டிக்க வேண்டுமென்று சொல்ல வில்லை. ஆனால் இது பொய்யென்று கூட யாரும் சொல்ல வில்லை!

சரி , இந்த பந்த் தவறென்றால் என் தவறு ? ஒரு பந்த் நடத்தினால் யாரெல்லாம் அவதிக்கு உள்ளாகின்றனர்? நமது பொது மக்கள் தான். பல கோடி வருவாய் நமது அரசுக்கும், சில பல தனியார் நிறுவனதிற்க்கும் தான் . இலங்கயில் நடக்கும் போருக்கு நாம் என் நஷ்டம் அடய வேண்டும் ? அப்படியே ஏதாவது செய்ய்ய நினைதால் நஷ்டம் வராமல் ஏதாவது செய்ய்யலாமே? அவசரதிற்க்கு ஆட்டோ கூட கிடைக்க வில்லை . இன்டர்னெட் இணைப்பை கூட ஆறு மணி வரை துண்டித்து உள்ளானர். என்ன சார் நியாயம் ?ஆனால் ஒன்று -நமது IT யில் பணி புரியும் நன்பர்கள் இதை வரவேற்க்கின்றனர். ஒரு நாள் விடுமுறை ஆயிற்றே! வியாழனுக்கு பதில் சனி வர சொல்லிய்ருக்கின்றனர்.எப்படியும் சனி கிழமைகளில் வேலை செய்ய்ய வேண்டும் . அதனால பரவாயில்லை


PS : இரண்டு நல்ல விஷயங்கள்.

1. இந்த பந்திலும் வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்து கொண்டு போகும் ஆட்கள் வந்தனர். எனக்கு உண்மையில் அவர்களின் கடமை உணர்ச்சி புல்லரிகின்றது . அவர்களுக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூட தர வேண்டும்!

2. வாய் கிழிய பேசும் நமது மர மண்டை தமிழர்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் இலங்கை சென்று அங்குள்ள தமிழர்க்ளை காண சென்றுள்ளனர். பகுத்தறிவு கொழுந்தான வீரமணி , ஞானி இதை பற்றி ஒன்றும் சொல்லும் மாட்டார்கள்.