Saturday, February 28, 2009

அரசியல் தமாஷ் - 2



தன்னுடய மைத்துனனிற்க்காக லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மிரட்டியதால் அமைச்சர் பூங்கோதை தனது பதவியை இழந்தார், எட்டு மாதத்திற்க்கு முன்பு . அவர் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் பேசியவை வெளியாகி பெரும் சர்ச்சை ஆகி ,முதல்வர் அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார் . பாராடதக்கது , இரண்டு நாள் முன்பு வரை.

நேற்று நமது கவர்னர் அதே பூங்கோதைக்கு தகவல் தொழில்நுட்பம் அமைச்சரவையை தாரை வார்திருக்கிறார். அந்த விழாவில் கலைஞரின் இரண்டாவது குடும்பம்த்தினர் அனைவரும் கலந்து ஆசிர்வத்திதுள்ளனர். ஒய்வு பெற்று , பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டிருந்த ஷண்முகம் தலைமையில் நியாயமான ஒரு விசாரணை கமிஷன் வைத்து பூங்கோதை குற்றமற்றவரென்று சான்றிதள் தந்துள்ளார் . அப்படியானல் , அந்த தொலைபேசியில் இடம் பெற்ற அந்த பெண்மணி , அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி யார் ? சும்மா விளையாட்டென்றால் , அப்படி விளையாடியனவர்க்ள் யார் ?

***

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன் பாட்டை பற்றி பேச குலாம் நபி ஆசாத் சென்னை வந்துள்ளார். அலுவலக பணி இடர் பட்டாலும் , குலாம் நபியின் சிறுபான்மை மனம் நோவக்கூடாதென்பதில் கலைஞர் கவனமாக இருப்பார். தொகுதி உடன்பாட்டில் ராமதாஸும் பங்கேற்ப்பாறா? இல்லை கடைசி நிமிடம் வரை மதில் மேல் பூனையாக இருந்து யார் ஜெய்க்க போகும் கட்சி யாரென்பதை கண்டுபிடித்து அந்த கூட்டணியில் சேர்வாரா? இருக்கவே இருகு நம்ம இலங்கை பிரச்சனை .. என்ன முடிவெடுத்தாலும் அதை காரணம் காட்டி விடலாம்.

****
தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பாகுபாடில்லாமல் செய்தி பிரசுரிக்கின்ரனர். இதை பற்றி பெருமைப்பட ஒன்றும் இல்லை . கலைஞரும் மாறன் சகோதரர்களும் இடையில் கொஞ்சம் ஃபெவிகால் போட்டபட்டுள்ளது. இருந்தாலும் அழகிரியின் கை ஓங்கி இருக்கும் வரையில் கொஞ்சம் கவனமாக தான் இருப்பார்கள் மாறன் brothers

***
தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி, தனது சகா நவீன் சாவ்லா காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுகிறாரென்று அவரை பணி நீக்கம் செய்ய்ய வேண்டுமென்று அவரின் பரிந்துரை , எதிர்பார்த்தபடி நடுவண் அரசால் நிராகரிக்க பட்டது . ரு வேளை கோபால்சாமி கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாக இருந்திருக்கலாம். நமது சேஷன் மாதிரி மன நிலை உடயவராக இருக்கலாம். இது வரைக்கும் சரி - ஆனால் அவர் அனுப்பிய ஆதாரங்கள் உண்மையா? அப்படி பொயென்றால் , ஏன் பொய்? உண்மையென்றால் , அதற்கு நடுவண் அரசு எனன் நட வடிக்கை எடுக்க போகிறது ?

நாமம் போட்ட ஒரு காரணத்தினால் , கோபால்சாமியை பி.ஜே.பீ யின் ஆதர்வாளரென்று கூற்வது சுத்த மடத்தனம் . அவரது அறிக்கையில் ஆதாரஙளை தெள்ள தெளிவாக கூறியிருப்பதாக www.rediff.com சொல்லுகிறது. அது செரி , எமர்ஜேன்ஸி போது காங்கிரஸ் ஆட்சிக்கு ஜால்ரா அடித்தவர் தான் இந்த நமது நவீன் சாவ்லா?

Wednesday, February 25, 2009

கலைமாமாணி நயந்தாரா !!!!!!!!

சுமார் எழுபது கலைஞர்களுக்கு ( நம்ம cm a சொல்லல) இந்த வருடம் கலைமாமணி விருதுகளை விநியோகம் பண்ணியிருக்கிறார்கள்.அதில் ஆண்களுக்கு செலவு வைத்த அஸின்னும் , நயந்தாராவும் அடக்கம். கலைமாமணி விருது எப்படி வந்தது , அதை பெரியார் எப்படி எதிர்த்தார் , அதை யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், என் இந்த இரண்டு ஹீரொயிங்களுக்கு கொடுக்க கூடாது போன்ற உபயகோமற்ற செய்திகளையும் , கருத்து நுரைகளையும் நீங்கள் ஞானியிடம் எதிர்பாருங்கள்.

நான் அப்படியே உல்டா ...என்ன தவறு . பெண்களாய் பிறந்து , அழகான அம்சங்களை வளர்த்து பேணி காபற்றியது குற்றமா? நயந்தாரா நமக்கு என்ன்வெல்லாம் செய்திருக்கிறார்!!

ஒரு மிலிட்டரி மாமாவிற்க்கு மகளாக பிறந்து , இந்தியா முழுவதும் சுற்றி திறிந்து , தமிழுக்கு சந்திரமுகி மூலம் அறிமுகமாகி , இன்று வில்லுவில் விஜயின் ஆட்டத்தை விட அவர் ஒரு பத்து அடி தூரம் ஓடி வந்தால் விஸில் தூள் பளக்கிறது!எத்தன அஜித்ரசிகர்கள் பில்லாவில் அவரின் சண்டை காட்ச்சிகள் போது உறங்கி விட்டு , கிளோ-ஸப் காட்ச்சிகளில் வீரென்று துள்ளி எழுந்தனர் ! பில்லாவில் கூட அவர் திறமை தெரியவில்லையா ? வில்லுவில் எத்தனை காட்சிகளில் குனிந்து நிமிர்ந்து , ' தலை நிமிர்ந்து நில்லடா' யென்னும் பாரதியின் கற் சொற்க்களை பிரகடன படுத்தியிருப்பார்!!

இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் . நயந்தாரவை..மன்னிக்கவும் ..வல்லவனை எடுத்து கொள்ளுங்கள் . சிம்புவின் மீது பல பொறாமை தொயிந்த அனல் முச்சினை அவர் முளைக்க்குள் புக செய்து அவர் நயந்தாராவுடன் கச முசா பண்ணிய திரை காவியங்களை வெளியட செய்து விட்டனரே, நமது ரசிகர்கள் ! அதை பார்த்து எத்தனை நாள் எனது நண்பன் ( ஆஸ் க்கு... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஸார்) தலைகாணியை கடித்திறுப்பார்? அவருக்கும் என்ன பல உருப்புகள் உருப்படியாக இல்லயா ?

குசேலனில் ரீ-ரெகார்டிங்கில் அவரை பார்த்த போழுது , உணர்ச்சி போங்கி கீ போர்டை அமுக்கி, அதுவே அருமையான பின்னனி இசையாக நமது தம்பி ஜீ.வீ.பிராகஷ் கொடுக்க வில்லையா? வல்லவனில் சிம்பு அடித்த கிஸ்ஸை பார்த்து ,' சினிமாவிலே இப்படி பண்ண்ரானே , நிஜமா என்ன பண்ணியிருப்பானென்று ஒரு கள்ளி காட்டு இதிகாஸத்தை நமது நண்பர்கள் படைக்க வில்லையா?' . இது கூட பரவாயில்லை ..வடிவேல் , குசேலனில் அந்த கிலோ-ஸப்பில் நயனதாராவின் ..ச் ச் .. முடிய வில்லை .

கலைக்கு இப்படி செவையும் உப்புமாவும் செய்த நமது நயந்தாரவிற்க்கு என்ன கொடுத்தாலும் தகும் !! இப்பொழுது இந்த இரண்டு காவியங்களை பார்த்து மகிழுங்கள்.







Sunday, February 22, 2009

தமிழ அரசியல் - தமாஷ் -1



காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாரென்று நமது தாயார் கூறியுள்ளார். படிக்காதவனில் உள்ள மசாலாவை விட இந்த அறிவிப்பில் அதிகம்.ஏன் ?

1) ஒரு வேளை கூட்டணிக்கு காங்கிரஸ் தயாரென்றால் , தி.மு.காவின் கதி என்ன ? பாட்டாளி மக்கள் கட்சியின் மீது குதிரை சவாரி செய்ய்ய வேண்டிய தான் . மாநில ஆட்சியும் காங்கிரஸை நம்பி இருப்பதால் , கலைஞர் தனது திரை கதை எழுதும் திறமையை கொஞ்சம் கூர் படுத்தி கொள்ள வேண்டும் . ஒன்றும் இல்லையென்றால் , அதை வைத்து கொண்டு ஒட்டலாம்.

2) கனிமொழி என்ன பண்ணுவார்? சென்னை சங்கமம் என்ன ஆகும் ? ஜெகத் காஸ்பெரின் LTTE உதவிக்கு யார் உதவி செய்வார்? கனிமொழி பேசாமல் பெண் விடுதலை பற்றி பத்து புத்தகங்கள் எழுதி , அதை வீரமனி வைத்து வெளியிட்டு, அந்த வெளியிட்டு விழாவில் 'தமிழ் பெண்கள் மட்டும் கற்ப்புகரிசிகள், ரீக் வேதத்தில் மற்ற பெண்களை தொட்டு விட்டு தான் ஒரு இந்து சாப்பிட வேண்டுமென்று சொல்ல்யிருக்கிறது ' போன்ற கருத்துக்களை கூறி மீடியாவில் ஒரு வாரம் ஒட்டலாம்.

3) ஸ்டாலின் ? ஒரு வேளை பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஆ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று , தி.மு.கா மாநிலத்தில் ஆட்சி இழக்க ஏற்பட்டால் - தனது தொகுதியை மட்டும் நென்றாக கவனித்து கொள்ளலாம்.டி.ஆர்.பாலு , ஆற்காட்டார் போன்றோரை ஒதுக்கி வைக்க முயற்ச்சி எடுக்க வேண்டும். எப்படியும் ஜெயலலிதா எதாவது ஊழலோ , கடுமையான நடவடிக்கை எடுத்தோ மக்கள் செல்வாக்கை இழந்து விடுவார்- அப்பொழுது மீண்டும் தி.மு.கா காட்சிக்கு வரும் - ஸ்டாலின் Cm ஆகலாம்.

4) நமது சிகப்பு சகோதரர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. காங்கிரஸ் பழம் புளிக்குமென்று ஆ.தி.மு.க பக்கம் சாய்ந்தால், ஆ.தி.மு.கா அந்த பழைய புளித்த பழத்தையே நக்கி இருக்கிறது. இதுவும் தேவை , இன்னுமும் தேவை !

5) சேது சமுத்திரம் , ஸ்பெக்ற்றம், தன் மகனின் கம்பேனிக்கு சலுகை கட்டிய ஊழல்- இப்படி பல செய்த நமது எச்சிலுகுரிய அமைச்சர்கள் , முடிந்த வரையில் சுருட்டி கொள்ள வேண்டும். ஜெய லலிதா வந்தால் , ஜெட்டி முதற்கொண்டு உருவி விடுவார்.

6) இதில் பெரிசாக பயன் பேறுபவர் நமது மாறன் சகோதரர்கள் தான் . காலாநதி மாறனை வைத்து தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பார பட்சம் இல்லாமல் செய்திகள் வெளியிட வேண்டியது. காலநதி மாறனை வைத்து தாத்தா, ஸ்டாலினுடன் கொஞ்சம் ஃபெய்விகால் ஒட்டு ஒட்ட வேண்டியது. ஜெய்ச்சால் , காலநதி மாறன் , தோற்றார் தயானதி மாறனின் காப்பாற்றுவார்.

Friday, February 20, 2009

நான் கடவுள்




இந்த ப்டத்தை எப்படி விமர்சனம் செய்வதென்று தெரியவில்லை. நான் என்ன எதிர் பார்த்தேன் என்று தெரியவில்லை . சில துளிகள் மட்டும் இங்கே!

1) இரண்டு முன்று நிகழ்வுகளை வைத்து கொண்டு மீதி பதினைந்து காட்சிகளில் சிலரின் வாழ்கையை - அல்லது வாழ்க்கை இல்லாததை மட்டுமே வைத்து ஒரு இரண்டு மணி நேர படத்தை கொடுக்க முடியுமா?

2) எல்லாரும் இளையராஜாவின் இசையை நமிதா உயரத்திற்க்கு புகழ்கின்றனர். எனக்கு பாடல்களை தவிர பின்னனி நிறய காட்சிகளில் ஒரு இடராக உணர்ந்தேன். குறிப்பாக முன் பாதியில் சில காட்சிகளில் , அந்த உணர்விற்க்கு மாறாக இருப்பதாக பட்டது . ஆனால் அதே சமயம் அகோரியின் மனது ஒரு புரியாத புதிர் யென்பதை விளக்குவதற்க்காக இப்படி செய்ய்ய பட்டதாயென்று தெரியவில்லை .

3) பூஜா நன்றாக நடித்திருகின்றார், அவரின் அந்த வெள்ளை லென்ஸ் அப்பட்டமாக தெரிந்தாலும் ! கிளைமாக்ஸில் அவரின் உருக்கம் , படதொகுப்பாளரின் கை வண்ணத்தால் பட சுறுளில் கரைந்து போயிருக்கிறது.

4) கிளைமாக்ஸ் பலர் பல பல்லுடன் பல கருத்துகளை வீசி இருக்கின்றனர். அகோரி வாழ்வு இப்படி தான் இருக்குமோ ? சினிமாவில் ஹீரோ யார் என்பதை கொஞ்ச நேரம் சிந்திக்க செய்கின்றார் பாலா !

5) இந்த மொட்டை வில்லன் பக்கா - அதிலும் அந்த ஊமையை பிச்சை வைக்க அவர் செய்யும் ... பாலா - fantastic !!!

6) வடிவேல் கூடவே பல படத்தில் காமேடிக்கு ஒத்து ஊதி வந்தவர் இந்த படத்தில் பிண்ணி யெடுத்திருகின்றார்.

7) படத்தின் மைய்ய நாடி- நாங்கள் பிச்சை காரர்கள் , சமுதாயம் நக்கி துப்பிய கசடுகள் - இந்த குப்பையில் சந்தோஷங்கள் , அன்பு , பினைப்பு இருக்கும் - ஆனால் இப்படி கூட வாழ் விட மாட்டார்கள் போல இருக்கிறதே.இப்படி உள்ள ஒரு சுழ் நிலையில் சமுதாயத்தை எச்சிலாக மதிக்கும் ஒரு அகோரி வந்தால் !

8) இந்த படம் பிடித்திருகிறதா ? - ஒரு வாரம் முன்பு இல்லை , இப்பொழுது யொசிக்க நன்றாக இருக்கிறது !!!

Saturday, February 07, 2009

எங்களுக்கும் ஒரு இடம் !


நேற்று , பிராமணர் சங்கத்தில், பிராமண்ர்களுக்கு எழு சதவிதம் இடம் கிடைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருகின்றனர். இதில் எஸ். வீ. சேகர் போன்றோர் கலந்து கொண்டிருகின்றனர். இதை reverse discrimintaionல் பார்க்க வேண்டும்.உண்மையில் ,பிராமண்ர்களுக்கு என்ன மாதிரி தொல்லைகள் இருகின்றன யென்பதை பார்ப்போம்.

1) எல்லா படங்களிலும் குறைந்தது பிராமணர்கள் பழமைவாதிகள்,ஜாதி வெறியர்கள்-விவேக் உட்பட பல நபர்கள் சித்தரித்து உள்ளனர். இதில் ஒரளவு உண்மை இருந்தாலும் , தலித்தின் வாயில் மலத்தை அடைக்கும் அளவுக்கு ஜாதி வெறி இல்லை. கமலஹாஸன் தேவர் மகனெறு ஒரு படத்தில் தேவர்களை போற்றி ஒரு பாடல் வைத்ததால் , தலித் அன்பர்களை அந்த பாடல் பாடி அடக்கியாண்டர்களென்று ஒரு அரஸ்யில்வாதி கூறினார்( எவ்வள்வு உண்மைஎன்று தெரியவில்லை ) .

2) எல்லோரும் விவாதித்து நைந்து போன இட ஒதிக்கிடு . இதை பற்றி விரிவாக கூற தேவயில்லை.

3)சில அரசியில்வாதிகள், குறிப்பாக, நமது கலைஞர் அவர்கள் , தான் பிராமணர் இல்லாத காரணத்தில் தான் முன்னேற முடியவில்லையென்று ஆயிரம் கோடி சொத்து செர்ந்த்து பின்னரும் கூரி கொண்டிருகின்ரணர்.

4) ஜாதி பெயர் ஒரு prefixஆக கெட்ட வாத்தைகளுக்கு முன்பாக உபயகோபடுத்தபடுவது அநேகமாக 'ஐயர்' ஜாதிக்கு தான்.உதாரணமாக 'ஐய புண்**'.

5) எந்த விவாதமெத்தாலும் , அதில் ஒரு பிராமணர் பங்கேற்றால், அவருடய வாதத்திற்க்கு சரியான காரணங்களின் கோர்வையாக எதிர் வாதம் கிடைக்காவிட்டால், உடனடியாக மனு சாஸ்திரத்தை எடுத்து விடுவார்கள். மனு சாஸ்திரத்தை பூரணமாக படிக்காமல். மனௌ சாஸ்திரத்தின் படி பிராமணன், பிழைப்பதற்க்கு வேதங்களைஒதி தான் பிழைக்க வேண்டும். பணம் சேர்த்து வைக்க கூடாது. இந்த மாதிரி விடஷயங்களை அவர்கள் சுட்டி காட்ட மாட்ட்டர்கள்.

இப்படி பல ..ஆனால் , இந்த காரணங்களுக்காக இட ஒதிக்கிடு கேட்பதா ? எஸ்.வீ. சேகர் நன்றாக காமமேடி பண்ணுகிறார், உண்மையிலே! மேல சொன்ன ஐந்து விஷயங்களால் , பிராமணர்களை யாரும் ஒதுக்க வில்லை . ஆனால் கொஞ்சம் கொஞ்சம் மரியாதை குறைவாக நடத்துகின்ரனர். அவ்வள்வு தான் . அதிலும் பெரிய காமேடி , பிராமணர்கள் சிறு பான்மையோரென்று காரணம் காடி இட ஒதிக்கிடு வேண்டுமாம். இப்படியே போனால் , எதோ ஒரு groupism விதிகளில் , ஒரு குழு சிறுபான்மை குழுக்களில் சேர்ந்து விடும்.

போங்கடா போங்க

இலங்கை தமிழர்களை கொடுமை படுத்தும் சிங்கள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று மற்றொரு இந்திய தமிழர் இன்று தீ குளித்துள்ளார். இதை பலர் பல விதமாக பார்க்கின்றனர். எனக்கு அவருடய குடும்பத்தை நினைத்தால் தான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. அவர்து தாய் , தந்தை , தம்பி , மனைவி , குழந்தைக்களுக்கு அவரின் கடமை என்ன ஆயிற்று ?ஒரு அரசியில் தலைவர் தீ குளிப்பது இல்லையே !

உயிரை என் எப்படி துச்சமாக மதிக்கின்றனர்? இல்லை தீ குளித்தால் தான் ஏதாவது ஆக போகிறதா ? அதற்க்கு பதிலாக , கள்ள தோணி பிடித்து இலங்கைக்கு போய் ஏதாவது செய்யலாமே! இல்லை ஒரு ஆயிரம் பேரை சேர்த்து ஒரு பெரிய போரடத்தை நடந்த்த்லாமே-அப்பொழுது ஒன்றும் பெரிதாக நடந்து விடாது , ஆனால் உங்கள் உயிர் இப்படி போகாது . எல்லாற்றுக்கும் மேலாக தமிழை உயிர் போல மதித்து , இந்திய தமிழர்களை சர்க்கஸ் கோமாளிகளை போன்று நடத்தும் நமது அரசியில் வாதிகள் இதை பற்றி ஒரு வரி கூட துப்ப மாட்டார்கள்.வோட்டு கேட்ட்கும் போழுது மட்டும் ஒட்டுவார்கள்.

இது இப்படி யென்றால் , சிங்கங்கள், புலிகள் , சிறுத்தைகளென்று கட்சிகள் நடத்தி வரும் 'உலக' தமிழர்கள் , நமது நாட்டின் சொத்துகளை அழித்தால் , இலங்கை தமிழர்களை வாழ வைக்குமென்று நம்புகின்றனர். இதற்கு பதிலாக அவர்கள் வீட்டு பொருட்களை தெருவில் போடு உடைக்கலாம். முடிந்தால் இந்த போராட்டத்தில் நாங்களும் உற்சாகமாக கலந்து கொள்வோம்.முதலில் அந்த கட்சியின் தலைவரின் வீட்டு பொருட்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.முதலில் சாகும் வரை அவரின் நான்கு நாள் போராட்டம் முடியட்டும்.

அப்புறம் நமது சி.எம் அடித்த பல்டி பற்றி பல அன்பர்கள் தங்கள் இணைய தளத்தில் கல்வெட்டு எழுதி வைப்பது போல எழுதி உள்ளனர். குறிப்பாக அவர் பிராபகரனை ஒரு சர்வாதிகாரி யென்றும் , சகோதர யுத்ததின் ஆரம்ப வேராக இருக்கிறாரென்று அவர் சொல்லியிருப்பது இது தான் முதல் தடவையென்று நினைக்கிறேன் . இது அவர் பார்த்த உண்மையா , இல்லை மத்தியில் மந்திரிகளை நிலைக்க வைக்கும் உத்தியா, பல்டியா, வயதானவர்களின் குழப்ப பேச்சா, தெளிவா , தனது ஆட்சி காங்கிரஸின் கையிலும் இருக்கின்ற உண்மையா-தெரியவில்லை. ஆனால் சில பல வருஷமாக கடிதம், எதுகை-மோனை,முரசொலி,தங்களின் குடும்ப சானல்கள், இப்படி பல வற்றின் மூலம் LTTE க்கு ஆதரவு தெரிவித்தவர் , இப்படி சொல்லியிருப்பது , well its surprising !

எல்லாவற்றிக்கும் மேலாக,சோ, ஜெயலலிதா, கலைஞர், சிறுத்தைகள்,தமிழ், இதயம் இனித்தது-> இதையெல்லாம் விட்டு விடுங்கள்.அப்பாவி மக்கள் நமக்கு அண்டை நாட்டில் , வருட கணக்கில் யாரோ பண்ணிய தப்புகளின் குவியல்களின் காரணமாக இன்று கொடுமைகளை அனுபவிக்கின்ர். நாம் வாழும் வெறுமை மனதில் கொஞ்சம் ஈரமும் பிறக்கட்டும். அதற்க்கு பிறகு உங்கள் வாழ்கயை பார்த்து கொள்ளுங்கள்.