Thursday, March 26, 2009

Pasanga - coming of Age

நிலா காய்கிறது போன்று ஆரம்பித்து , உழவன் , தாஜ்மஹால் இசையை நினைவு படுத்தி பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் மிதக்கிறது 'அன்பாலே' பாடல் . பால முரளி அவர்களின் குரல் கொஞ்சம் லெசாக பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் அருமையான ரஹ்மான் மாதிரியான பாடல்- குறிப்பாக பாடலில் வரும் புல்லாங்குழல், இரண்டாம் சரணதிற்க்கு முன்பு வரும்BGM அருமையோஅருமை.

கொஞ்சம் michale jackson சாயல் வந்துவிடுவொமோ யென்ற பயத்தில் அரம்பிக்கும் 'ஒரு வெட்கம்' , சமீபத்தில் வந்த வாரணம் ஆயிரம் ரகம்.அருமை , பாடலில் தொடர்ச்சியாக வரும் அந்த bass lines , ரிதம் அருமை . shreya ghoshal பக்கா , அதுவும் சரணம் ஆரம்பத்தில் அவரது குரலும் bass lines உம் சொக்க வைக்கிறது .கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த பாடல் , கொஞ்சம் சுமாராக படம் பிடித்தாலும்.

தீம் முசிக் மாதிரி ஆரம்பித்து குழந்தைகளின் rock பாடல் மாதிரி இருக்கிறது. சரணத்தில் , கொஞ்சம் என்னுடய விருப்பமான கார்திக்ராஜாவை நினைவுபடுத்திகிறார். பாடல் வரிகளில் , வாண்டுகளின் அட்டாகசம் ததும்பிகிறது.

பென்னி தாயளின் பெயரை பார்த்த உடன் தெரிந்து விட்டது , இது ஒரு இன்னொரு சுப்பிரமணியபுர rock பாடல் மாதிரி தான் இருக்க போகிறதுஎன்று. நன்று. துள்ளலாக இருக்கிறது. ஆனால் அடுத்த படத்தில் உபயகோபடுத்த வேண்டாம்.

ஜேம்ஸ் வசந்தன்- இவர் கற்புறம் இல்லை , சுரியனாக வர வாழ்த்துகள். அதற்க்கு இரண்டம் படி வைத்து விட்டார்.

Saturday, March 07, 2009

TN07 AL 4777 and AAmir

taxi நம்பர் படமும் ஆமீரும் நேற்று பார்த்தேன் . இரண்டு படமும் பார்த்தேன் . இரண்டுமே , ஒரு நாளில் நடக்கும் கதையை இரண்டு மணி நேரத்தில் சுருக்கி கூறப்பட்டுள்ளது . இறுதியில் , நமது ரசிகர்கள் மனம் நோகாதவாறு , ஆமீரில் கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் , முடிவில் பாஸிடிவாக முடித்திருக்கிறார்கள்.

ஆமீரில் , வெளி நாட்டிலிருந்து வீடு திரும்பும் ஒரு முஸ்லீம் டாக்டர் , ஒரு தீவிரவாதியின் செல்ஃபோனில் சிக்கி , விக்கி , தவித்து முடிவில் , தனது பெயருக்கேற்ப்ப ( ஆமீர் ஏன்றால் தலைவனென்று பொருள்) ஒரு காரியத்தை செய்கிறார். ஆமீர் , புத்துணர்ச்சி பெற்ற இந்தி சினிமாவின் ஒரு அடையாளம். பாடல்கள் இல்லை , காதல் இல்லை , ஸ்டார் இல்லை , அதிகமாய் சிருக்கும் வில்லனில்லை. இருந்தும் இரண்டு மணி நேரம் , அடுத்து என்ன நடக்க இருக்க போகின்ற ஆவலை நம்மிடம் தூண்டுகின்றது .

ஆனால் taxi நம்பர் படத்தை அப்படி சொல்ல முடியவில்லை . விறுவிறுப்பான கதை தான் . தேவையில்லாத இரண்டு பாடல்கள் கூட பரவாயில்லை -ஏதிரும் , புதிருமாக இருக்கும் இரண்டு நபர்களின் குணா தசியங்களை விலக்கும் விதத்தில் ஜோலித்திருக்க்கும் இயக்குனர் , இரண்டாம் பகுதியில் படத்த்குப்பில் விழந்த ஒட்டையை இடுப்போ , மார்போ வைத்து அடைக்க மறந்து விட்டார். டாக்ஸி டிரைவராக , கோபம் கொப்பளிக்கும் மனிதராக , உண்மையை மறைக்கும் கணவனாக , பழி வாங்கும் கதா பாதிரமாக - இப்படி பல குணா தசியங்களை , பட தொகுப்பின் சொதப்பல்களிலும் , கொஞ்சம் நகைச்சுவை கலந்து அருமையாக கொடுத்திருக்கிறார் பசுபதி . இவரின் கிழக்குக்கு மேற்க்காக நம்ம ' அஞ்சாதே' அஜ்மல் , இதில் பணக்காரணாக , தந்தையின் சொத்தை திரும்பி பெற வாதாடும் மகனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முன்னவரின் டாக்சியில் இயவர் ஏர போக , அது எப்படி இருவரின் வாழ்க்கையை பாதிக்கிறதென்பது தான் கதை.

ஆமீருக்கும் , taxi நம்பர் படத்திற்க்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை , jazz இசையை மையமாக வைத்து அமைந்துள்ள பின்னனி இசை . ஆமீரில் , இது கொஞ்சம் தூக்கம். ஹாலிவுடில் , இந்த மாதிரி படத்திற்க்கு jazz இசையை தான் பயன் படுத்துவர்.இங்கேயும் கச்சிதமாக பொருந்தியிருக்கிரது. கூறிப்ப்பாக , முதல் பதினைது நிமிடங்களில் theme செட் பண்ணும் இந்த பினனி தூள்.ஆமீரில் பாடல்கல் பின்னனியாக , படத்துடன் கலந்து வருகிறது . தீவிரவாதி அவரை ஒவ்வொரு இடமாக அலைய விட்டு, அப்படி அலயும் போது , கதாநாயகனின் முஸ்லீம் இன உனர்ச்சியை உஸ்ப்பேத்தி விடும் காட்சிகள் , ஒரு நல்ல சைக்கிளாகிகல் யுக்க்தி.அதே சமயம் , ஆமீரை பார்த்து , ஐஸ் குச்சியை நக்கிய படி , அந்த விபச்சாரி , தான் ஆங்கில காம யுக்திகளிலும் அனுபவமிக்கவளென்று சொல்லுவது மும்பை இயக்குனருக்கான லொள்ளு.


80ஸில் , பணக்கார பெண்ணும் , எழை ஆணும் படத்தின் பாதி வரை சண்டை போட்டு விட்டு , அப்புறம் ஜப்பானில் போயி டுயட் பாடுவர்கள். டாக்ஸியில் கிட்ட தட்ட அப்படி தான் . ஆனால் ஹீரோயின் கிடையாது . அதற்க்கு பதிலாக அஜ்மல் - ஏதிர்பாராத விதமாக பசுபதி வண்டியில் ஏறி விட்டு , அதில் தன் பாங்க் லாக்கரில் கீயை விட்டு விட , அந்த டாக்ஸி விபத்தில் மட்ட அதிலிருந்து எலி-புனை கதை ஆரம்பிக்கிறது.ஆமீரில் , எலி த்னது வீட்டிற்க்கு போகும்ம இல்லயா என்பதௌ தான் மைய்யம் . இந்த ஒரு வித்தியாசித்திலாலே , ஆமீருடன் நமக்கு கொஞ்சம் பினைப்பு அதிகமாக இருக்கிறது.டாக்ஸியில் , விறுவிறுப்பிற்க்கு தீனி கம்மி . இன்னும் கொஞ்சம் தீனி போட்டு , கதா பாத்திரங்களுடன் பினைப்பு ஏற்படுகிற மாதிரி பண்ணியிருந்தால் , டாக்ஸி நன்றாக் இருந்திருக்கும் , சிம்ரன் , பசுபதியின் நடிப்பை போல .