Wednesday, January 14, 2009

அபியும் நானும் - வா வா என் தேவதையே!!




'அபியும் நானும்' பாடல்களை முதல் முறை கேட்ட பொழுது எனக்கு அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லையென்று தான் தோன்றியது. அதிலும் அந்த கைலாஷ் கெரின் உச்சரிப்பு - பாவர்க்காய் சாரை போல கசந்தது. சாதனா சர்கம் பாடல் மட்டும் பாஸ் மார்க் வாங்கி தலையை தூக்கியது. வித்யாசாகரை இளையராஜாவின் வாரிசு என்றேழுதிய கையை ஒரு முறை கடிக்கலாம் போன்று இருந்த்து - இந்த பாடலை கேட்கும் வரை .

அப்பா - மகள் உறவு பற்றி அதிகமாக யாரும் திரையில் சொல்லியது இல்லை . அப்படியே சொன்னாலும் , ஒடி போன மகளை நினைத்து உருகி , மருகி அழும் அப்பாவை தான் காண்ப்பிபார்கள். இந்தியில் இதை விட மோசம். அந்த உறவை இசையை விட இசையில் மிதக்கும் அருமையான வரிகளில் இன்னும் அழுத்தமாக சொல்ல முடியும்.வைரமுத்துவும் வித்யசாகரும் அதை தான் செய்திருக்கிறாற்கள். ஆண் என்ன தான் தான் தன் மனைவியை கட்டி போட்டாலும் தன் மகளென்று வரும் போது பாசம் அவனை கட்டி போட்டு விடும் , சுதந்திரமும் துளிரும் - அவள் மீது அக்கறை மட்டும் அந்த சுந்ததிரத்தை சுருக்கும்.

cut the crap !- இந்த பாடலில் நான் ரசித்த சில வரிகள்!

செலவ மகள் அழுகை போல் ஒரு சில்லென்று சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகை போல் யுக பூகளுக்கு புன்னகைக்க தெரிய வில்லை


என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முதுக்கள் தெரிக்கின்ற மழலை போல முன்னூறு மொழிகளில் வார்தைகள் இல்லை.

தந்தைக்கும் தாயமுதம் சுரந்தம்மா..என் தங்கத்தை மார்போடு அனைக்கையலே !

normally , நான் இசையை மட்டும் தான் கவனிப்பேன். அதன் ஒவ்வரூ ஸ்வரத்தையும் ரசிப்பேன். இப்பொழுது வார்த்தையும் ரசிக்க காரணம்- வித்யசாகரா? வைரமுத்துவா ? பிராகஷ் ராஜ .....யாரும் இல்லை - என் பெண் குழந்தை தான் !

Friday, January 02, 2009

நான் கடவுள் - by Illayraaja

நான் கடவுள் பாடல்களுக்கு என்ன மாத்திரி விமர்சனத்தை எழுதுவதென்று தெரிய வில்லை - சிவோஹம் பாடலை கேட்டால் நம்மை AC ரூமிலிருந்து , இமய மலைக்கு கொண்டு செல்கிறது. சிரேயாவின் 'கண்ணில் பார்வை' பாடலும் சரி , வரிகளும் சரி - ஒரு பிச்சைகாரிக்கு எழுதினாலும் செல்வ செழிப்புடன் இருக்கிறது. மாதாவின் உன் கோவிலில் பாடலும் , அம்மா உன் பிள்ளை பாடலும் பழைய வீட்டிற்க்கு புதிய , அதே சமயம் பாரம்பரியத்தை கெடுக்காத வண்ணம்.

பிச்சை பாத்திரம் பாடல் - ஒரு பக்தி பாடலை சினிமாவிற்க்கு உபயோகித்தன் மூலம் , பாடலின் பின்னனி இசையும் , அந்த பாவமும் தான் பாடலின் உணர்வை பிரதிபலிகிறது , ராகம் மட்டுமில்லை யென்பதை நிருபிகிறது. ஒரே கடுப்பு - ஒரு பத்து இல்லை பதினைந்து நிமிடதிற்க்கு பின்னனி இசையிலிருந்து CD yil போட்டு இருக்கலாம்- வாங்குபவர்களுக்கு அது value addஆக இருந்து இருக்கும்.

போதுமடா சாமி !!!!

1) ஒரு சப்பை கதையை எடுத்து கொண்டு அதை non-linear ஆக பிரித்து , ஏதோ Roshmon படம் எடுத்த மாதிரி நமது இயக்குனர்கள் ஒரு square frame கண்ணாடி போட்டு கொண்டு பிற்றி கொள்வது !

2) அழுத்தாமாக இருக்க வரவேண்டிய காட்சிகளில் கூட ஏதோ மணிரத்னத்தின் வாரிசாக தன்னை நினைத்து கொண்டு , 'ஏன்' ' அப்பா', ' பிணம்' போன்ற வசனகளை மட்டும் வைத்து , ஏதாவது கேட்டால் cinema is a visual medium யென்று நமக்கே pump அடிக்க வேண்டியது !

3) கதாநாயகி அறிமுக காட்சியில் அவரை நாயுடு ஹாலுக்கு இலவசமாக விளம்பரபடுத்துகின்ற மாதிரி ஒடுவது !

4) 'ஏலே, வாலே போன்ற வார்த்தைகளை மட்டும் உபயோகித்து திருநெல்வேலி nativityயை காட்டியவாறு பிற்றி கொள்வது !

5) ஊரில் பல மின்சார வயர்கள் அறுந்து கிடக்க இவர்கள் ஏதோ ஜாக்கி ஜான் தம்பி மாதிரி அந்த வயர்களை வைத்து சண்டை காட்சிகள் போட்டு விட்டு , matrix பாணியில் சண்டை காட்ச்சிகள் இருப்பகதாக பொங்கல் தினத்தன்று பேட்டி காணும் ஒரு ஜல்சா figure யிடம் பீலா உடுவது !

6) ஒரே ஒரு படதிற்க்கு பாடி விட்டி airtel super singer நிகழ்ச்சிக்கு நடுவராக போவது !

7) தயாரிப்பாளரின் மகன் என்ற ஒரு தகுதியை வைத்து, பைனாசியர் மகன் என்ற ஒரு தகுதி மட்டும் இருக்கும் ஒரு மாமாவை ஹீரோவாக போட்டு அதற்க்கு ArRehman அல்லது யுவன் இசையை போட்டு படம் இயக்குவது !

8) என்னுடய கதையை யாரும் படமாக்க விரும்ப வில்லை , யாரும் நடிக்க மறுக்கின்றனரென்று உட்டான்ஸ் விட்டு , ஒரு gulfi figure ai கதாநாயகியாக போட்டு , தொட்டு கொள்வதர்க்கு வடிவேலையோ விவேக்கையோ போட்டு சொந்த படம் எடுப்பது .

9) ஒரு படத்தை தமிழில் எடுத்து , அதை தெலுங்கில் ரீமேக் செய்து , அதை பாத்து கன்னாடவில் ஒருவர் படமெடுத்து , அதை திரும்பி இங்கே நம்ம இளைய நாயர்களை வைத்து பட்மெடுத்து நமக்கு ஆப்பு வைப்பது !

10) கிராமங்கள் புதன் கிரஹத்தில் இருப்பது போல படமெடுக்கும் இந்தி பட உலகில் , இரண்டு படங்கள் வேலை செய்து , இந்தி படங்கள் தான் நன்றாக இருக்கின்றன யென்று பேட்டி கொடுக்கும் ஒளிபதிவாளர்கள்!