Sunday, November 15, 2009

Kandaen Kadhalai Review


காதலை மைய்யமாக வைத்து எடுக்க பட்ட படங்களை நான் பொதுவாக பார்ப்பதில்லை. அதில் கதாபாதிரங்கள் கேலி சித்திரமாக இருக்கும். உண்மை இருக்காது. எதார்த்தம் இருக்காது. திரை கதையில் முடிச்சுகள் இருக்க வேண்டுமென்பாதற்க்காக கதாபாதிரத்தின் தன்மை மாறும்.இங்கே பிரச்சனை எதார்த்தம் தான். இப்படியும் நடுக்குமோ யென்று திரை அரங்கில் யோசிக்க வைத்து விட்டால் அந்த படம் பப்படம் தான். அவன் யோசிக்காதவாறு அமேரிக்காவில் ஒரு பாடல், வடிவேலின் ஹாஸ்யம், கயறு போட்டு சண்டை - இப்படி கவனத்தை திருப்பி சரி செய்வார்கள்.

இதில் விதிவிலக்காக சில படங்கள் - உதாரணமாக 'காதல்' திரைப்படம். திராவிட நிறம் உள்ள இருவர் காதலை இந்த 2000ல் சுவையாக சொல்ல முடியுமென்பதை நிருபித்த படம்.எதார்த்தை மீறும் பொழுது சில மேல சொன்ன சில ஒட்டல்கள் தேவை படுகின்றது. இந்த படத்தில் அஞ்சலி ( தமன்னா- 1990ல் ஜோதிகா நடித்திருப்பார்)கதாபத்திரம் நிஜ வாழக்கயில் நாம் பார்க்க முடியுமா ? இதில் பிரச்சனை எதை எதார்த்த்மென்று சொல்கிறோமென்பதை பொறுத்து தான் அமையும். இது என்ன முட்டாள் தனமாக இருக்கிறது ( இதை விட சந்தோஷ் சுபிரமணியம் படத்தில் வரும் ஜேனீலீயாவின் கதாபாதிரம் மிகவும் முட்டாள் தனமாக இருக்கும் ) யென்று யோசிக்கும் முன்பே அதற்க்கு விடை கிடைத்து விட்டது - எனக்கு இரண்டு இருக்கை தள்ளி உட்கார்ந்து இருக்கும் ஒரு அம்மணியிடம் . கிட்டதட்ட அஞ்சலி காதபாதிரத்தின் பிம்பமாக தான் நடந்து கொண்டார். காதாலில் தோல்வியுற்ற ஷக்தியும் ( பரத்,உயரம் கொஞ்சம் கூட இருந்தால் கச்சிதமாக இருக்கும் ) , அந்த அந்த தருணத்தை முழுமையாக , குதுகோலமாக கொண்டாடும் அஞ்சலியும் ஒரு ரயில் பயணத்தில் ( வழக்கம் போல ) எதேச்சையாக சந்திக்கின்றனர்.அதில் இருந்து அவ்ர்களின் வாழ்க்கை மாறி , காதல் புகுந்து என்னா ஆகிரதென்பது தான் கதை.


இந்த மாதிரி கதைகளில் - கதாநாயகன், நாயகி அழகாக தான் இருக்க வேண்டும். அந்த ஜோடி கார், பஸ், பாடல், ரயில் பயணம் - இப்படி பல விஷயங்களில் நடுவே காதல் முளைக்க வேண்டுமென்றால் , அழகாக தான் இருக்க வேண்டும்.அந்த வகயில் கச்சிதமாக பொருந்துகின்ரனர். பரத்தின் மனமாற்றமும்,வெண்பஞ்சு பாடலும் ( வித்யாசாகர் ,) கச்சிதமாக பொருந்துகிரது. ஒரு அழகான, உற்ச்சாகம் சுற்றி வரும் ஒரு பெண்ணுடன் சில நாட்க்கள் கழித்தால் , அவள் மீது , இன்னொருவரை அவள் காதலித்தாலும் , ஒரு ஈர்ப்பு வருமென்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லியுள்ளார். இதை ரோஜாகூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த் காதபாதிரத்துடன் ஓப்பிட்டு பாருங்கள் , அதில் உள்ள செயர்க்கைதனம் ந்ன்றாக தெரியும்.

ஆனால் , பிரச்சனை இங்கு தான் ஆரம்பிகிறது- எப்படி எடுத்து செல்ல வேண்டுமென்பதில் கொஞ்சம் குழப்பம் உள்ளது போன்று தோன்றுகிறது. இந்த குழப்பம் ' காதல் செய்கிறேன், ஆனால் அவள் இன்னோருவரை காதலிக்கிறார்' - இதை கையாழ்வதில் நமது விக்கிரமனின்வழியை ஏடுக்கிறார்( வேறென்ன , அவள் காதல் ஒன்று செய்வதற்க்கு, இதயத்தை கிழித்து முயற்ச்சி செய்வது). இங்கு தான் எனக்கும் படதிற்க்கும் தூரம் ஆரம்பிக்கிறது.ஒரு படத்திலாவது உணர்ச்சிகளை வெளிபடுத்தும் கதாபாதிரமாக யாராவது வடிவமைக்க மாட்டார்களா? இல்லை , இந்த குழப்பம் தான் யதார்த்தமா ?இந்த இடத்திலிருந்து பாடல் ,mistaken identity, ஜல்லி காரணதிற்காக உண்மை சொல்ல முடியாமல் போவது , பல பல படங்களில் பார்த்து , துவைத்து போன காட்ச்சிகள் தான்.

jabe we met நான் பார்த்ததில்லை. வெறும் காட்சிகள்- திருப்பு முனை வைத்து நகரும் திரைகதைகளில், முதன்மை கதாபாதிரமேற்று நடிக்கும் நடிகர்களின் ஆயாச நடிப்பில் தான் பார்வையாளர்களை கவர முடியும். அந்த விதத்தில், பரத்தும், தமன்னாவும் அருமையாக நடித்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சம் மணிரத்தினத்தின் கதாபாதிரத்தின் சாயலில் அஞ்சலி கதாபாதிரம். கொஞ்சம் தவறி நடித்தாலும் முட்டாள்தனமாக அமைந்து விடும். அந்த விதத்தில் ,தமன்னாவிற்க்கும், அவர்களுக்கு dubbing கொடுத்த அம்மணிக்கும் பாராட்டுக்கள்.காதலும் , தவிப்பும் , உணர்ச்சிகள் அடக்கம் - இப்படி மாற்றி மாற்றி வருவதால் வித்யாசாகர் தன் திறமையை பாடல்களுடன் நிறுத்தியுள்ளார், பின்னனி,பின்னனி தான்.

உண்மையான காதல் படதிற்க்கு காத்து கிடக்க வேண்டும்.

Saturday, November 14, 2009

Paa - Music review




'பா' பட பாடல்களை கேட்டு கொண்டு இருக்கும் பொழுது , எனக்குள் பல கேள்விகள் எழுந்தன ? குறிப்பாக ஒரு இசையமைப்பாளரின் ரசிகனாக இருந்து கொண்டு , இசையை , எதிர்பார்ப்பு இல்லாமல் , ஏதேச்சையாக ஒரு அருவி தென்பட்டு அதை பார்த்து ரசிப்பதை பார்க்கும் விதமாக ரசிக்க முடியுமா? கொஞ்சம் கஷ்டம் தான். இப்படி இசையை பருகுவது, நமது இசை உடம்பிற்க்கு நல்லதா ? இதே பாடல்களை ஒரு இரண்டு வாரத்திற்க்கு பிறகு கேட்டால் எப்படி இருக்கும்?இன்னும் ரசித்து இருக்க முடியுமோ?

பல வித எதிர்ப்பார்ப்பு - இளைய ராஜா வட இந்திய ரசிகர்களை கவருவாரா ? அவருடய இசை, வெகு ஜன மக்களின் iPodல் ஒலிக்கும்மா ? கொஞ்சம் கவலையும் , எதிர்ப்பார்ப்புடன் தான் இந்த பட பாடள்கலை அனுகினேன். குறிப்பாக இந்த வருடத்தில் வந்த அவரின் பாடல்கள் கொஞ்சம் நம்பிக்கை தந்தது.குறிப்பாக வால்மீகி, பழசி ராஜா நன்றாக இருந்தன. மனதில் ஒட்டின.பல வருடங்களாக ராஜாவின் திறமை குறைந்துவிட்டதென்று சில பேர் கூறுகின்றனர்.அவருடய synth usage தான் ரொம்ப மோசமென்று சில பேரின் அபிபராயம்.அவருக்கு பெரிய படங்கள் கிடைக்க வில்லை - சேது, ஹேய் ராம் , விருமாண்டி பாருங்கள்- பழய ராஜவை பார்க்கலாமென்பது இன்னோரு வாதம்.

பா- முளையும் , மனதும் , கணித விதி படி வயதும் பதினைந்தை தாண்டாமல், உடம்பு மட்டும் அறுபதை தாண்டினால் என்ற சுவையான கரு. இதற்கு ராஜாவின் இசை படதிற்கு பக்க பலமாகவும் , அவரின் இசை ரசிகர்காளின் எதிர்ப்பார்ப்பிற்க்கு பலமாகவும் இருக்க வேண்டும். அதை ' மூடி மூடி' பாடல் பக்காவாக பூர்த்தி செய் கிறது. முதல் interlude ல் வரும் இசை , அவரின் இசை நரைக்க வில்லையென்பதை காட்டுகிறது. ஷில்பா ராவின் குரல் ந்ன்றாக இருக்கிறது.பாடல் முழவதும் ஒரு jazz feel இருக்கிறது. ஒரு பாடல் நவீனமாக இருக்க , jazz ஐ பயன் படுத்து கிறார்கள்.தவறு இல்லை .இதை வைத்து மட்டும் synth usage ந்ன்றாக இருக்கிரதென்று சொல்ல முடியாவிட்டாலும், முந்தய பாடல்களை விட பல படிகள் தாண்டி சுவையாக இருக்கிறது.


இதை அதிகாரமாக சொல்ல முடியாது - 'கும் சும்' போன்ற மெட்டுகளை ராஜாவால் தான் போட முடியும் ( கில்லி படதிற்க்கு பிறகு பல மொழிகள் பார்த்த ஒரு விஷயம் இந்த பாடல் தான் .). இந்த பாடலை அப்படியே பியானோவில் வாசித்து பாருங்கள் , அல்லது என்னை மாதிரி வெறும் கையில் மொழம் போட்டு விட்டு கற்பனை பண்ணி பாருங்கள். ஒரு பீதோவனும் , மோஸொர்டும் வருவார்கள். இந்த பாடலில் , குறிப்பாக , இரண்டாம் interlude ல் இலவசமாக jazz பியனோ கச்சேரிக்கு அழைத்து சொல்லுகின்றனர். குழந்தைகளுக்கு பாடுவதில் பேர் பெற்ற நமது பவதாரினி, சரணத்தை , மேல சொன்னதை நிருபிக்கும் வகை பாடியுள்ளார்.இந்த பாடல்களை இரடடை கிழவி போன்ற சொற்க்கள் நிறய வருகின்றன, நல்ல அலங்காரமாக அவை இருக்கின்றன.

கடந்த இருபது வருடமாக ஒரு ஆராய்ச்சி நடுக்கிறது. ஒவ்வோரு ராகமும் எந்த உணர்ச்சியை வெளிபடுத்தி கின்றதென்பதை.இதனை இளைய ராஜா ஓப்பு கொள்ள வில்லை . ஆவரை போறுத்த வரை , ஒருராகம் எப்படி வேண்டாலும் பயன் படுத்த முடியும்- அது அந்த இசையமை பாளரின் ஷிருஷ்டி யை பொறுத்து இருக்கிறது.உதாரணதிற்க்கு , எஜமான் படத்தில் வரும் ' ஒரு நாளும்' பாடல் ஒரு பக்தி பாடல் யென்பதை எவ்வளவு பேருக்கு தெரியும் . ஜானகியை எடுத்து , சுதா ரகு நாதானையும் , கொஞ்சம் chordsai மாற்றி கற்ப்பனை பண்ணி பாருங்கள். அதே தான் - புத்த்ம் புது காலை பாடலும் . ஒரு இரவில் ஒரு காதலன் தனக்கு முத்தம் கொடுத்து விட்டால் , மறு நாள் காலை அந்த பெண் மொட்டு எப்படி உணர்வாளோ அந்த உணர்வை தான் என்னால் கற்ப்பனை செய்ய்ய முடிகிறது. ஆனால் , இதில் - ' ஹல்கே செ ' வை கேட்டால் , முதலில் ஏமாற்றமும் , அதை தொடர்ந்து , ஆச்சர்யமும் தான் வருகிறது. பா படதில் , அந்த சிறுவன் இறந்து , இந்த பாடல போடாமல் இருந்தால் சரி - அப்படி போட்டு விட்டால் , அழுகை ஆறு தான் ஒடும் ( progeria வினால் அவதி படும் மனிதர்கள் இருபது வயது மேல் வாழ்வதில்லை . youtube ல் ஒரு விடியோ பார்த்து விட்டு அழுதேன்.ஊதாரணதிற்க்கு ஒரு தாய் progeria வந்த தன் சிறுவன் பற்றி சொல்கிறாள் ' he has started losing teeth now .. i Guess that shouldn't be a problem , as he doesn't like dஎன்டிஸ்ட்'-எப்படி பட்ட எண்ண ஒட்டங்கள் ஒட வேணுமென்பதை இன்னும் குழப்பிகிறது, வாழ்க்கயை விடையிலிருந்து வினாவிற்க்கு தள்ளுகிறது )

"தாய் எட்டு அடி பாய்ந்தால் .." பழ மொழி யருக்கு பொருந்துமோ, என் கார்த்திக் ராஜாவிற்க்கு பொருந்தாத்ன்று வலையில் பல பேர் பின்னியுள்ளனர்.எல்லாரும் ஒரு வகையில் இசை போட்டால் , இவர் இன்னொரு மாதிரி போடுவார். ஆனால் , எனக்கு இது தான் பிடித்திருந்தது. இப்பொழுது எடுத்து கொள்ளுங்கள். யுவன், பிரகாஷ், தரன் , இமான்,ப்ரெம்ஜி - இவர்களின் இசை வடிவில் என்ன வித்தியாசம் இருக்கிறது - ஒருவர் அதே இசை வடிவத்தில் நன்றாக போடுகின்றார், மற்றொருவர் சுமாரக . அவ்வளவு தான் . ஆனல் வடிவம் ஒரே மாதிரி தான் இருக்கிரது ( யுவன் இந்த கூட்டதில் முன்னோடி) . படம் பல இல்லாமல் இருக்கம் கார்திக் , 'ஹிச்கி ஹிச்கி' பாடலின் பின்னனி சேர்த்துள்ளாறென்று நினைகின்றேன். அவர் இசையில் தான் தனியாக சில இசை துளிகள் தனியாக தெரியும் , பாடலின் முதன்மை ராகதிலும் , இசை சேர்ப்பிலும் சரி - வெகு ஜன மக்களுக்கு பிடிக்கத மாதிரி இருக்கும் , கொஞ்சம் நிறய தடவை கேட்டால் , பிடித்து விடும் . குறிப்பாக முதல் interlude கேட்டு பாருங்கள்- அது முடியும் விதமும் , இரண்டாம் interlude , தனியாக இசை செருபு உள்ள இரண்டாம் சரனம் - இது கார்த்திகின் அடையாளம். அடித்து சொல்லுவேன். இந்த பாடலில் second interlude ல் திடீரென்று , பா தீம் மியுசிக் வருகிரது . ஒரு வேலை இந்த பாடல், காதல் கடந்து , காமம் புகுந்து , அந்த அன்பில் பிறக்கும் குழந்தையை குறிகின்றதோ ? மொத்ததில் பாடல் பிடித்திருந்து.

யாருக்கும் தெரியமால் ஒரு முத்து இருந்தது. பாலு மகேந்திரா அவர்களின் அது ஒரு கனா காலம் படத்தில் - "காடு வழி " பாடல். அதை ஒரு 14 வயது பயன் குரலில் அமுக்கி பாடியுல்ளார் அமிதாப். காட்ச்சியுடன் ஒட்டி உல்ள காரந்த்தினால் , நடுவில் வரும் செல்டிக் இசையை தவிர பெரிதாக கவர இல்லை. இருந்தாலும் , படதில் மிக ந்ன்றாக இருக்குமென்பது என்னுடய அனுமானம்.இந்த பாடலை re-mix பன்ணிய விதம் பிடிக்கவில்லை.

படம் வரட்டும் .பால்கி நன்றாக எடுத்து இருப்பரென்ர் நினை கின்றேன். ராஜாவின் பின்னனி சேர்ப்பை சத்தியம் திரை அரங்கில் பார்க்க வேண்டும்.