Saturday, April 25, 2009

கொஞ்சம் பயமா இருக்கு !!

Thursday, April 23, 2009

முடிகிட்டு போ !


இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் போரினை நிறுத்த ஒரு நாள் வாழ்க்கையை, இங்கு நமது முதல் அமைச்சர் நிறுத்தியுள்ளார்.இது சரியா தவறா என்பது அப்புறம். சரியென்று வைத்து கொண்டால் கூட , எப்படி சரி ? இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடக்கின்றது. அதனால் மத்தியில் உள்ள நமது 'ஹம். ஆப்கே ஹே கவ்ன்' அரசியல்வாதிகள், இதை கண்டிப்பாக கண்டுகொள்ள மாடார்கள். அப்படியே இருந்தாலும் , எதோ காது நோண்டுவதற்க்காக இலங்கை அதிபரை எச்சில் அறிக்கை செய்வார்கள். இலங்கை போயி ஒரு மசால் வடை சாப்பிட்டு வருவார் நமது பிரானாப் முகர்ஜி.இதை ஒரு பெரிய மயிராட்டம் தினகரனில் சாதனையாக போடுவார்கள்.இவ்வளவு தான் நடக்கும். ஐம்பது வருட போரை ஒரு பந்தை வைத்து நிறுத்த முற்ப்பட்டால்?

இதில் இன்னொரு கூத்து இருக்கிறது. இலங்கையில் பொது மக்கள் LTTE யில் பிடியிலிருது வெளியேறி வருகின்றனர். சுமார் 60000 மக்கள் இது வரை வெளியேறி பாதுக்காபான இடத்துக்கு கொண்டு செல்ல பட்டனர். அதில் வெளியான செய்திகளில், புலிகள் தங்களை கேடயமாக பயன் படுத்தியதாக கூறியள்ளனர். இதற்கு நமது புலி ஆதரவாளார்கள் என்ன சொல்லுகின்றனர்? இந்த மாதிரி செய்தி வரும் போழுது அமைதி தான் . சோ மட்டும் அதை பற்றி எழுது வார் . ஆ,வி, குமுதம் யெல்லாம் அமைதி தான்.இதை வைத்து புலிகளை கண்டிக்க வேண்டுமென்று சொல்ல வில்லை. ஆனால் இது பொய்யென்று கூட யாரும் சொல்ல வில்லை!

சரி , இந்த பந்த் தவறென்றால் என் தவறு ? ஒரு பந்த் நடத்தினால் யாரெல்லாம் அவதிக்கு உள்ளாகின்றனர்? நமது பொது மக்கள் தான். பல கோடி வருவாய் நமது அரசுக்கும், சில பல தனியார் நிறுவனதிற்க்கும் தான் . இலங்கயில் நடக்கும் போருக்கு நாம் என் நஷ்டம் அடய வேண்டும் ? அப்படியே ஏதாவது செய்ய்ய நினைதால் நஷ்டம் வராமல் ஏதாவது செய்ய்யலாமே? அவசரதிற்க்கு ஆட்டோ கூட கிடைக்க வில்லை . இன்டர்னெட் இணைப்பை கூட ஆறு மணி வரை துண்டித்து உள்ளானர். என்ன சார் நியாயம் ?ஆனால் ஒன்று -நமது IT யில் பணி புரியும் நன்பர்கள் இதை வரவேற்க்கின்றனர். ஒரு நாள் விடுமுறை ஆயிற்றே! வியாழனுக்கு பதில் சனி வர சொல்லிய்ருக்கின்றனர்.எப்படியும் சனி கிழமைகளில் வேலை செய்ய்ய வேண்டும் . அதனால பரவாயில்லை


PS : இரண்டு நல்ல விஷயங்கள்.

1. இந்த பந்திலும் வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்து கொண்டு போகும் ஆட்கள் வந்தனர். எனக்கு உண்மையில் அவர்களின் கடமை உணர்ச்சி புல்லரிகின்றது . அவர்களுக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூட தர வேண்டும்!

2. வாய் கிழிய பேசும் நமது மர மண்டை தமிழர்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் இலங்கை சென்று அங்குள்ள தமிழர்க்ளை காண சென்றுள்ளனர். பகுத்தறிவு கொழுந்தான வீரமணி , ஞானி இதை பற்றி ஒன்றும் சொல்லும் மாட்டார்கள்.

Sunday, April 19, 2009

அயன், IPL, அரசியல் கூத்து

நம் நாட்டின் மாடு சூடா மன்னர் இன்று காங்கிரஸ் மேல் ஒரு குண்டை வீசி இருக்கிறார். 1992 வில் நடந்த பாபர் மசுதி இடிப்பிற்கு காங்கிரஸ் உடந்தை - அதாவது , அப்போழுது பிரதம மந்திரியாக இருந்த நமது மொனலிசா நரஸிம்ம ராவ் பாபர் மசுதி இடிக்க படுமென்று தெரிந்தும் ஒன்றும் பண்ணவில்லை.இது ஏற்க கூடியதாக இல்லை . எல்.கே.அத்வானி அவர்களே இதை ஏதிர்பார்திருக்க மாட்டார்.பத்தியாயிரம் , உணர்வு ததும்பும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் , அங்கு என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது-குஜராத்தில் நடந்ததை போல . ஆனால் இப்படி அவர்களை உணர்ச்சி வச படி பேசியது பா.ஜா.காவின் சில தலைவர்களாக இருக்கலாம். சரி , இந்த விஷியத்திற்க்கு வருவோம். நமது லொள்ளு லாலு ஜி , பிரதம மந்திரியை பார்த்து அதிகம் பேச வேண்டாம் , அப்படி பேசினால் , இது போன்ற ரகசியங்களை சொல்ல வேண்டியிருக்கும் யென்று ஏச்சி அரித்து உள்ளார். ஐந்து ஆண்டு காலமாக இரயில்வே மந்திரியாக இருந்த போழுது, இது தெரிய வில்லை . அதுவும் நம்ம பச்ச புள்ள மன்மோஹன் SINh பார்த்து! ஆனால இதை பற்றி நாம கவலை பட வேண்டாம் . நோக்கியா ....மன்னிக்கவும்,சோனியா காந்தி மீது நம்பிக்கை இருக்கிறதென்று கூரி விட்டு , இரண்டு அமைச்சர் பதவி வாங்கி கொண்டு காங்கிரஸ் ஆட்சி வர நமது மாட்டுகார வேலன் உதவி செய்வார்.

***
இன்று IPL 2 வில் பஞ்சாப் அணியினரும் தில்லி அணியினரும் மோதி முடிந்த வரை நம்மை அவமான படுத்தினர்.20-20 யென்பதே ஒரு சுருக்க பட்ட புது முயற்ச்சி. அதிலும் மழை காரணமாக ஒரு அணி 12 ஒவர் பெட் செய்வதும் , மறுபடியும் மழை வந்து அடுத்த அணி வெறும் 7 ஒவர் விளையாடுவதும் லூசு தனமாக இருக்கிறது.முடிந்த வரை IPL பார்க்காதிர்கள். இப்பொழுது உள்ள பொருளாதார நிலைமயில் , எதாவ்து படிக்கவும். உங்களுடய மெள் அதிகாரிக்கு சோப் போடவும். அதுவும் இல்லயென்றால் காண்டம் வாங்கி கொண்டு வீடிற்க்கு போகவும் . எதாவ்து ஒன்று உருப்புடும்.

***

ஒரு வாரம் முன்பு அயன் பார்த்தேன். தமன்னாவின் உதடு , ஹாரிஸ் பாடல்கள், சுர்யாவின் திறமையான நடிப்பு , ஜகனின் ஹாஸியம் , வில்லனை தவிர எல்லாம் நன்றாக இருந்தது.குறிப்பாக அந்த ஆப்ப்ரிக்க சண்டை காட்சியின் வேகமும் , அழகான இருவர் நடுவே காதல் வளரும் விதமும், படம் பார்ப்பவர்களின் கவனத்தை தம் மிலிருந்து திரைக்கு கொண்டு வருகிறது.ஆனால் , அந்த வில்லன் ? இந்தியில் வசனத்தை பேசி , தமிழில் அதை டப் செய்து ,தமன்னாவிற்க்கு போட்டியாக முடி வளர்த்து , ஹாரிஸை விட்டு ஒரு செல்லோ பின்னனி இசையை கொடுத்தால் போதுமா? ஒரே ஒரு இடத்தில் , அவர் முதலில் கஞ்சாவை தொட்டு கொள்ளும் போழுது மட்டும் அவர் கதாபத்திரம் அழுத்தமாக பதிகிறது.மற்றபடி , மஹாபாரததில் அரக்கனின் கதாபாத்திராத்தில் எவ்வள்வு அழுத்தமோ, அதில் பாதி தான் இந்த வில்லனுக்கு.இந்த படத்தில் ம்ற்றொரு நல்ல விஷியம் , ஜெகனின் கதாபாத்திரம் தான் . முன் பகுதியில் , ஹாஸியதிற்க்கும், பின் பகுதியில் , சென்டிமென்டிற்க்கும் நன்றாக ஒத்து வருகிறார். சந்தானதிற்க்கு நல போட்டி.

1+1=2 போன்று நல்ல லாஜிக் உள்ளது , சண்டை காட்ச்சிகளிலும் கூட - சினிமாவின் விதிகளுக்கு உட்பட்டு! ஆக மோத்தம் முன்று மணி நேரம் நல்ல டைம் பாஸ்!!!!