Thursday, March 26, 2009

Pasanga - coming of Age

நிலா காய்கிறது போன்று ஆரம்பித்து , உழவன் , தாஜ்மஹால் இசையை நினைவு படுத்தி பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் மிதக்கிறது 'அன்பாலே' பாடல் . பால முரளி அவர்களின் குரல் கொஞ்சம் லெசாக பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் அருமையான ரஹ்மான் மாதிரியான பாடல்- குறிப்பாக பாடலில் வரும் புல்லாங்குழல், இரண்டாம் சரணதிற்க்கு முன்பு வரும்BGM அருமையோஅருமை.

கொஞ்சம் michale jackson சாயல் வந்துவிடுவொமோ யென்ற பயத்தில் அரம்பிக்கும் 'ஒரு வெட்கம்' , சமீபத்தில் வந்த வாரணம் ஆயிரம் ரகம்.அருமை , பாடலில் தொடர்ச்சியாக வரும் அந்த bass lines , ரிதம் அருமை . shreya ghoshal பக்கா , அதுவும் சரணம் ஆரம்பத்தில் அவரது குரலும் bass lines உம் சொக்க வைக்கிறது .கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த பாடல் , கொஞ்சம் சுமாராக படம் பிடித்தாலும்.

தீம் முசிக் மாதிரி ஆரம்பித்து குழந்தைகளின் rock பாடல் மாதிரி இருக்கிறது. சரணத்தில் , கொஞ்சம் என்னுடய விருப்பமான கார்திக்ராஜாவை நினைவுபடுத்திகிறார். பாடல் வரிகளில் , வாண்டுகளின் அட்டாகசம் ததும்பிகிறது.

பென்னி தாயளின் பெயரை பார்த்த உடன் தெரிந்து விட்டது , இது ஒரு இன்னொரு சுப்பிரமணியபுர rock பாடல் மாதிரி தான் இருக்க போகிறதுஎன்று. நன்று. துள்ளலாக இருக்கிறது. ஆனால் அடுத்த படத்தில் உபயகோபடுத்த வேண்டாம்.

ஜேம்ஸ் வசந்தன்- இவர் கற்புறம் இல்லை , சுரியனாக வர வாழ்த்துகள். அதற்க்கு இரண்டம் படி வைத்து விட்டார்.

No comments: