Friday, January 02, 2009

போதுமடா சாமி !!!!

1) ஒரு சப்பை கதையை எடுத்து கொண்டு அதை non-linear ஆக பிரித்து , ஏதோ Roshmon படம் எடுத்த மாதிரி நமது இயக்குனர்கள் ஒரு square frame கண்ணாடி போட்டு கொண்டு பிற்றி கொள்வது !

2) அழுத்தாமாக இருக்க வரவேண்டிய காட்சிகளில் கூட ஏதோ மணிரத்னத்தின் வாரிசாக தன்னை நினைத்து கொண்டு , 'ஏன்' ' அப்பா', ' பிணம்' போன்ற வசனகளை மட்டும் வைத்து , ஏதாவது கேட்டால் cinema is a visual medium யென்று நமக்கே pump அடிக்க வேண்டியது !

3) கதாநாயகி அறிமுக காட்சியில் அவரை நாயுடு ஹாலுக்கு இலவசமாக விளம்பரபடுத்துகின்ற மாதிரி ஒடுவது !

4) 'ஏலே, வாலே போன்ற வார்த்தைகளை மட்டும் உபயோகித்து திருநெல்வேலி nativityயை காட்டியவாறு பிற்றி கொள்வது !

5) ஊரில் பல மின்சார வயர்கள் அறுந்து கிடக்க இவர்கள் ஏதோ ஜாக்கி ஜான் தம்பி மாதிரி அந்த வயர்களை வைத்து சண்டை காட்சிகள் போட்டு விட்டு , matrix பாணியில் சண்டை காட்ச்சிகள் இருப்பகதாக பொங்கல் தினத்தன்று பேட்டி காணும் ஒரு ஜல்சா figure யிடம் பீலா உடுவது !

6) ஒரே ஒரு படதிற்க்கு பாடி விட்டி airtel super singer நிகழ்ச்சிக்கு நடுவராக போவது !

7) தயாரிப்பாளரின் மகன் என்ற ஒரு தகுதியை வைத்து, பைனாசியர் மகன் என்ற ஒரு தகுதி மட்டும் இருக்கும் ஒரு மாமாவை ஹீரோவாக போட்டு அதற்க்கு ArRehman அல்லது யுவன் இசையை போட்டு படம் இயக்குவது !

8) என்னுடய கதையை யாரும் படமாக்க விரும்ப வில்லை , யாரும் நடிக்க மறுக்கின்றனரென்று உட்டான்ஸ் விட்டு , ஒரு gulfi figure ai கதாநாயகியாக போட்டு , தொட்டு கொள்வதர்க்கு வடிவேலையோ விவேக்கையோ போட்டு சொந்த படம் எடுப்பது .

9) ஒரு படத்தை தமிழில் எடுத்து , அதை தெலுங்கில் ரீமேக் செய்து , அதை பாத்து கன்னாடவில் ஒருவர் படமெடுத்து , அதை திரும்பி இங்கே நம்ம இளைய நாயர்களை வைத்து பட்மெடுத்து நமக்கு ஆப்பு வைப்பது !

10) கிராமங்கள் புதன் கிரஹத்தில் இருப்பது போல படமெடுக்கும் இந்தி பட உலகில் , இரண்டு படங்கள் வேலை செய்து , இந்தி படங்கள் தான் நன்றாக இருக்கின்றன யென்று பேட்டி கொடுக்கும் ஒளிபதிவாளர்கள்!

No comments: