Wednesday, January 14, 2009

அபியும் நானும் - வா வா என் தேவதையே!!




'அபியும் நானும்' பாடல்களை முதல் முறை கேட்ட பொழுது எனக்கு அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லையென்று தான் தோன்றியது. அதிலும் அந்த கைலாஷ் கெரின் உச்சரிப்பு - பாவர்க்காய் சாரை போல கசந்தது. சாதனா சர்கம் பாடல் மட்டும் பாஸ் மார்க் வாங்கி தலையை தூக்கியது. வித்யாசாகரை இளையராஜாவின் வாரிசு என்றேழுதிய கையை ஒரு முறை கடிக்கலாம் போன்று இருந்த்து - இந்த பாடலை கேட்கும் வரை .

அப்பா - மகள் உறவு பற்றி அதிகமாக யாரும் திரையில் சொல்லியது இல்லை . அப்படியே சொன்னாலும் , ஒடி போன மகளை நினைத்து உருகி , மருகி அழும் அப்பாவை தான் காண்ப்பிபார்கள். இந்தியில் இதை விட மோசம். அந்த உறவை இசையை விட இசையில் மிதக்கும் அருமையான வரிகளில் இன்னும் அழுத்தமாக சொல்ல முடியும்.வைரமுத்துவும் வித்யசாகரும் அதை தான் செய்திருக்கிறாற்கள். ஆண் என்ன தான் தான் தன் மனைவியை கட்டி போட்டாலும் தன் மகளென்று வரும் போது பாசம் அவனை கட்டி போட்டு விடும் , சுதந்திரமும் துளிரும் - அவள் மீது அக்கறை மட்டும் அந்த சுந்ததிரத்தை சுருக்கும்.

cut the crap !- இந்த பாடலில் நான் ரசித்த சில வரிகள்!

செலவ மகள் அழுகை போல் ஒரு சில்லென்று சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகை போல் யுக பூகளுக்கு புன்னகைக்க தெரிய வில்லை


என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முதுக்கள் தெரிக்கின்ற மழலை போல முன்னூறு மொழிகளில் வார்தைகள் இல்லை.

தந்தைக்கும் தாயமுதம் சுரந்தம்மா..என் தங்கத்தை மார்போடு அனைக்கையலே !

normally , நான் இசையை மட்டும் தான் கவனிப்பேன். அதன் ஒவ்வரூ ஸ்வரத்தையும் ரசிப்பேன். இப்பொழுது வார்த்தையும் ரசிக்க காரணம்- வித்யசாகரா? வைரமுத்துவா ? பிராகஷ் ராஜ .....யாரும் இல்லை - என் பெண் குழந்தை தான் !

No comments: