Friday, January 02, 2009

நான் கடவுள் - by Illayraaja

நான் கடவுள் பாடல்களுக்கு என்ன மாத்திரி விமர்சனத்தை எழுதுவதென்று தெரிய வில்லை - சிவோஹம் பாடலை கேட்டால் நம்மை AC ரூமிலிருந்து , இமய மலைக்கு கொண்டு செல்கிறது. சிரேயாவின் 'கண்ணில் பார்வை' பாடலும் சரி , வரிகளும் சரி - ஒரு பிச்சைகாரிக்கு எழுதினாலும் செல்வ செழிப்புடன் இருக்கிறது. மாதாவின் உன் கோவிலில் பாடலும் , அம்மா உன் பிள்ளை பாடலும் பழைய வீட்டிற்க்கு புதிய , அதே சமயம் பாரம்பரியத்தை கெடுக்காத வண்ணம்.

பிச்சை பாத்திரம் பாடல் - ஒரு பக்தி பாடலை சினிமாவிற்க்கு உபயோகித்தன் மூலம் , பாடலின் பின்னனி இசையும் , அந்த பாவமும் தான் பாடலின் உணர்வை பிரதிபலிகிறது , ராகம் மட்டுமில்லை யென்பதை நிருபிகிறது. ஒரே கடுப்பு - ஒரு பத்து இல்லை பதினைந்து நிமிடதிற்க்கு பின்னனி இசையிலிருந்து CD yil போட்டு இருக்கலாம்- வாங்குபவர்களுக்கு அது value addஆக இருந்து இருக்கும்.

No comments: