Saturday, February 07, 2009

போங்கடா போங்க

இலங்கை தமிழர்களை கொடுமை படுத்தும் சிங்கள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று மற்றொரு இந்திய தமிழர் இன்று தீ குளித்துள்ளார். இதை பலர் பல விதமாக பார்க்கின்றனர். எனக்கு அவருடய குடும்பத்தை நினைத்தால் தான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. அவர்து தாய் , தந்தை , தம்பி , மனைவி , குழந்தைக்களுக்கு அவரின் கடமை என்ன ஆயிற்று ?ஒரு அரசியில் தலைவர் தீ குளிப்பது இல்லையே !

உயிரை என் எப்படி துச்சமாக மதிக்கின்றனர்? இல்லை தீ குளித்தால் தான் ஏதாவது ஆக போகிறதா ? அதற்க்கு பதிலாக , கள்ள தோணி பிடித்து இலங்கைக்கு போய் ஏதாவது செய்யலாமே! இல்லை ஒரு ஆயிரம் பேரை சேர்த்து ஒரு பெரிய போரடத்தை நடந்த்த்லாமே-அப்பொழுது ஒன்றும் பெரிதாக நடந்து விடாது , ஆனால் உங்கள் உயிர் இப்படி போகாது . எல்லாற்றுக்கும் மேலாக தமிழை உயிர் போல மதித்து , இந்திய தமிழர்களை சர்க்கஸ் கோமாளிகளை போன்று நடத்தும் நமது அரசியில் வாதிகள் இதை பற்றி ஒரு வரி கூட துப்ப மாட்டார்கள்.வோட்டு கேட்ட்கும் போழுது மட்டும் ஒட்டுவார்கள்.

இது இப்படி யென்றால் , சிங்கங்கள், புலிகள் , சிறுத்தைகளென்று கட்சிகள் நடத்தி வரும் 'உலக' தமிழர்கள் , நமது நாட்டின் சொத்துகளை அழித்தால் , இலங்கை தமிழர்களை வாழ வைக்குமென்று நம்புகின்றனர். இதற்கு பதிலாக அவர்கள் வீட்டு பொருட்களை தெருவில் போடு உடைக்கலாம். முடிந்தால் இந்த போராட்டத்தில் நாங்களும் உற்சாகமாக கலந்து கொள்வோம்.முதலில் அந்த கட்சியின் தலைவரின் வீட்டு பொருட்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.முதலில் சாகும் வரை அவரின் நான்கு நாள் போராட்டம் முடியட்டும்.

அப்புறம் நமது சி.எம் அடித்த பல்டி பற்றி பல அன்பர்கள் தங்கள் இணைய தளத்தில் கல்வெட்டு எழுதி வைப்பது போல எழுதி உள்ளனர். குறிப்பாக அவர் பிராபகரனை ஒரு சர்வாதிகாரி யென்றும் , சகோதர யுத்ததின் ஆரம்ப வேராக இருக்கிறாரென்று அவர் சொல்லியிருப்பது இது தான் முதல் தடவையென்று நினைக்கிறேன் . இது அவர் பார்த்த உண்மையா , இல்லை மத்தியில் மந்திரிகளை நிலைக்க வைக்கும் உத்தியா, பல்டியா, வயதானவர்களின் குழப்ப பேச்சா, தெளிவா , தனது ஆட்சி காங்கிரஸின் கையிலும் இருக்கின்ற உண்மையா-தெரியவில்லை. ஆனால் சில பல வருஷமாக கடிதம், எதுகை-மோனை,முரசொலி,தங்களின் குடும்ப சானல்கள், இப்படி பல வற்றின் மூலம் LTTE க்கு ஆதரவு தெரிவித்தவர் , இப்படி சொல்லியிருப்பது , well its surprising !

எல்லாவற்றிக்கும் மேலாக,சோ, ஜெயலலிதா, கலைஞர், சிறுத்தைகள்,தமிழ், இதயம் இனித்தது-> இதையெல்லாம் விட்டு விடுங்கள்.அப்பாவி மக்கள் நமக்கு அண்டை நாட்டில் , வருட கணக்கில் யாரோ பண்ணிய தப்புகளின் குவியல்களின் காரணமாக இன்று கொடுமைகளை அனுபவிக்கின்ர். நாம் வாழும் வெறுமை மனதில் கொஞ்சம் ஈரமும் பிறக்கட்டும். அதற்க்கு பிறகு உங்கள் வாழ்கயை பார்த்து கொள்ளுங்கள்.

No comments: