Saturday, February 28, 2009

அரசியல் தமாஷ் - 2



தன்னுடய மைத்துனனிற்க்காக லஞ்ச ஒழிப்பு அதிகாரியை மிரட்டியதால் அமைச்சர் பூங்கோதை தனது பதவியை இழந்தார், எட்டு மாதத்திற்க்கு முன்பு . அவர் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் பேசியவை வெளியாகி பெரும் சர்ச்சை ஆகி ,முதல்வர் அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார் . பாராடதக்கது , இரண்டு நாள் முன்பு வரை.

நேற்று நமது கவர்னர் அதே பூங்கோதைக்கு தகவல் தொழில்நுட்பம் அமைச்சரவையை தாரை வார்திருக்கிறார். அந்த விழாவில் கலைஞரின் இரண்டாவது குடும்பம்த்தினர் அனைவரும் கலந்து ஆசிர்வத்திதுள்ளனர். ஒய்வு பெற்று , பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டிருந்த ஷண்முகம் தலைமையில் நியாயமான ஒரு விசாரணை கமிஷன் வைத்து பூங்கோதை குற்றமற்றவரென்று சான்றிதள் தந்துள்ளார் . அப்படியானல் , அந்த தொலைபேசியில் இடம் பெற்ற அந்த பெண்மணி , அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி யார் ? சும்மா விளையாட்டென்றால் , அப்படி விளையாடியனவர்க்ள் யார் ?

***

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன் பாட்டை பற்றி பேச குலாம் நபி ஆசாத் சென்னை வந்துள்ளார். அலுவலக பணி இடர் பட்டாலும் , குலாம் நபியின் சிறுபான்மை மனம் நோவக்கூடாதென்பதில் கலைஞர் கவனமாக இருப்பார். தொகுதி உடன்பாட்டில் ராமதாஸும் பங்கேற்ப்பாறா? இல்லை கடைசி நிமிடம் வரை மதில் மேல் பூனையாக இருந்து யார் ஜெய்க்க போகும் கட்சி யாரென்பதை கண்டுபிடித்து அந்த கூட்டணியில் சேர்வாரா? இருக்கவே இருகு நம்ம இலங்கை பிரச்சனை .. என்ன முடிவெடுத்தாலும் அதை காரணம் காட்டி விடலாம்.

****
தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பாகுபாடில்லாமல் செய்தி பிரசுரிக்கின்ரனர். இதை பற்றி பெருமைப்பட ஒன்றும் இல்லை . கலைஞரும் மாறன் சகோதரர்களும் இடையில் கொஞ்சம் ஃபெவிகால் போட்டபட்டுள்ளது. இருந்தாலும் அழகிரியின் கை ஓங்கி இருக்கும் வரையில் கொஞ்சம் கவனமாக தான் இருப்பார்கள் மாறன் brothers

***
தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி, தனது சகா நவீன் சாவ்லா காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுகிறாரென்று அவரை பணி நீக்கம் செய்ய்ய வேண்டுமென்று அவரின் பரிந்துரை , எதிர்பார்த்தபடி நடுவண் அரசால் நிராகரிக்க பட்டது . ரு வேளை கோபால்சாமி கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாக இருந்திருக்கலாம். நமது சேஷன் மாதிரி மன நிலை உடயவராக இருக்கலாம். இது வரைக்கும் சரி - ஆனால் அவர் அனுப்பிய ஆதாரங்கள் உண்மையா? அப்படி பொயென்றால் , ஏன் பொய்? உண்மையென்றால் , அதற்கு நடுவண் அரசு எனன் நட வடிக்கை எடுக்க போகிறது ?

நாமம் போட்ட ஒரு காரணத்தினால் , கோபால்சாமியை பி.ஜே.பீ யின் ஆதர்வாளரென்று கூற்வது சுத்த மடத்தனம் . அவரது அறிக்கையில் ஆதாரஙளை தெள்ள தெளிவாக கூறியிருப்பதாக www.rediff.com சொல்லுகிறது. அது செரி , எமர்ஜேன்ஸி போது காங்கிரஸ் ஆட்சிக்கு ஜால்ரா அடித்தவர் தான் இந்த நமது நவீன் சாவ்லா?

No comments: