Sunday, February 22, 2009

தமிழ அரசியல் - தமாஷ் -1



காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாரென்று நமது தாயார் கூறியுள்ளார். படிக்காதவனில் உள்ள மசாலாவை விட இந்த அறிவிப்பில் அதிகம்.ஏன் ?

1) ஒரு வேளை கூட்டணிக்கு காங்கிரஸ் தயாரென்றால் , தி.மு.காவின் கதி என்ன ? பாட்டாளி மக்கள் கட்சியின் மீது குதிரை சவாரி செய்ய்ய வேண்டிய தான் . மாநில ஆட்சியும் காங்கிரஸை நம்பி இருப்பதால் , கலைஞர் தனது திரை கதை எழுதும் திறமையை கொஞ்சம் கூர் படுத்தி கொள்ள வேண்டும் . ஒன்றும் இல்லையென்றால் , அதை வைத்து கொண்டு ஒட்டலாம்.

2) கனிமொழி என்ன பண்ணுவார்? சென்னை சங்கமம் என்ன ஆகும் ? ஜெகத் காஸ்பெரின் LTTE உதவிக்கு யார் உதவி செய்வார்? கனிமொழி பேசாமல் பெண் விடுதலை பற்றி பத்து புத்தகங்கள் எழுதி , அதை வீரமனி வைத்து வெளியிட்டு, அந்த வெளியிட்டு விழாவில் 'தமிழ் பெண்கள் மட்டும் கற்ப்புகரிசிகள், ரீக் வேதத்தில் மற்ற பெண்களை தொட்டு விட்டு தான் ஒரு இந்து சாப்பிட வேண்டுமென்று சொல்ல்யிருக்கிறது ' போன்ற கருத்துக்களை கூறி மீடியாவில் ஒரு வாரம் ஒட்டலாம்.

3) ஸ்டாலின் ? ஒரு வேளை பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஆ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று , தி.மு.கா மாநிலத்தில் ஆட்சி இழக்க ஏற்பட்டால் - தனது தொகுதியை மட்டும் நென்றாக கவனித்து கொள்ளலாம்.டி.ஆர்.பாலு , ஆற்காட்டார் போன்றோரை ஒதுக்கி வைக்க முயற்ச்சி எடுக்க வேண்டும். எப்படியும் ஜெயலலிதா எதாவது ஊழலோ , கடுமையான நடவடிக்கை எடுத்தோ மக்கள் செல்வாக்கை இழந்து விடுவார்- அப்பொழுது மீண்டும் தி.மு.கா காட்சிக்கு வரும் - ஸ்டாலின் Cm ஆகலாம்.

4) நமது சிகப்பு சகோதரர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. காங்கிரஸ் பழம் புளிக்குமென்று ஆ.தி.மு.க பக்கம் சாய்ந்தால், ஆ.தி.மு.கா அந்த பழைய புளித்த பழத்தையே நக்கி இருக்கிறது. இதுவும் தேவை , இன்னுமும் தேவை !

5) சேது சமுத்திரம் , ஸ்பெக்ற்றம், தன் மகனின் கம்பேனிக்கு சலுகை கட்டிய ஊழல்- இப்படி பல செய்த நமது எச்சிலுகுரிய அமைச்சர்கள் , முடிந்த வரையில் சுருட்டி கொள்ள வேண்டும். ஜெய லலிதா வந்தால் , ஜெட்டி முதற்கொண்டு உருவி விடுவார்.

6) இதில் பெரிசாக பயன் பேறுபவர் நமது மாறன் சகோதரர்கள் தான் . காலாநதி மாறனை வைத்து தினகரனில் எல்லா கட்சிகள் பற்றி பார பட்சம் இல்லாமல் செய்திகள் வெளியிட வேண்டியது. காலநதி மாறனை வைத்து தாத்தா, ஸ்டாலினுடன் கொஞ்சம் ஃபெய்விகால் ஒட்டு ஒட்ட வேண்டியது. ஜெய்ச்சால் , காலநதி மாறன் , தோற்றார் தயானதி மாறனின் காப்பாற்றுவார்.

No comments: